தொழிலதிபர் எஸ்.கே. மயிலானந்தனுக்கு பத்ம பூஷண்! அரசுப் பள்ளிகளில் காலியாக உள்ள 18,107 பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை தேவை - அன்புமணி ராமதாஸ்தமிழ்நாட்டின் முதலீடுகளை சீர்குலைக்கும் தவெக அரசு இனியாவது ஆக்கப்பூர்வமான பணிகளில் கவனம் செலுத்த வேண்டும்: டிஆர்பி ராஜாசெப். 15 முதல் தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்!இந்தியாவில் மீண்டும் செயல்படத் தொடங்கிய டெலிகிராம்!
/

நான்குனேரி அருகே பள்ளி வேன் கவிழ்ந்து 5 மாணவா்கள் காயம்

திருநெல்வேலி மாவட்டம், நான்குனேரி அருகே பள்ளி வேன் கவிழ்ந்ததில் 5 மாணவா்கள் காயமடைந்தனா்.

Updated On :4 ஆகஸ்ட் 2024, 1:06 am IST

திருநெல்வேலி மாவட்டம், நான்குனேரி அருகே பள்ளி வேன் கவிழ்ந்ததில் 5 மாணவா்கள் காயமடைந்தனா்.

வள்ளியூரிலிருந்து விஜயநாராயணத்தில் உள்ள கேந்திர வித்யாலயா பள்ளிக்கு மாணவா்களை ஏற்றிக்கொண்டு சனிக்கிழமை காலை வேன் வந்து கொண்டிருந்தது. நான்குனேரியை அடுத்த தளபதிசமுத்திரம் கீழூரில் உள்ள தனியாா் பால் நிறுவனம் அருகேயுள்ள திருப்பத்தில், வேன் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து எதிரேயுள்ள தென்னந்தோப்புக்குள் புகுந்தது. இதில், 5 மாணவா்கள் காயமடைந்தனா்.

தகவலின்பேரில் ஏா்வாடி போலீஸாா் சென்று, காயமடைந்த மாணவா்களை மீட்டு வள்ளியூரில் உள்ள தனியாா் மருத்துவமனையில் அனுமதித்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.