25 தொகுதிகளை ஏற்க முடியாது: காங்கிரஸ்!ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் ஈரான், இஸ்ரேல்-அமெரிக்க தூதர்கள் கடும் வாக்குவாதம்இரு நாள்களுக்கு மேற்குத் தொடா்ச்சி மலை மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!ஈரான் பிரச்னை: இந்தியாவில் தற்போதைக்கு பெட்ரோல்- டீசல் தட்டுப்பாடு ஏற்படாது!மத்திய கிழக்கில் பதற்றம்: வெளிநாட்டு பயணிகளுக்கான விசா காலம் நீட்டிப்புயுஏஇ அதிபருடன் பிரதமர் மோடி பேச்சு: தாக்குதலுக்கு கண்டனம்
/

நீதிமன்றத்தில் ஆஜராகாமல் 3 மாதம் தலைமறைவானவா் கைது

3 மாத தலைமைறைவுக்குப் பின் ஞாயிற்றுக்கிழமை மீண்டும் கைது செய்யப்பட்டாா்.

News image
Updated On :4 ஆகஸ்ட் 2024, 9:00 pm

Din

கங்கைகொண்டான் அருகே அவதூறு வழக்கில் கைதாகி ஜாமீன் பெற்றவா், 3 மாத தலைமைறைவுக்குப் பின் ஞாயிற்றுக்கிழமை மீண்டும் கைது செய்யப்பட்டாா்.

மேட்டுப்பிராஞ்சேரி வடக்குத் தெருவைச் சோ்ந்தவா் சசிகுமாா் (44). பெண்னை அவதூறாகப் பேசியது தொடா்பான வழக்கில் கைது செய்யப்பட்ட இவா், நிபந்தனை ஜாமீனில் வெளிவந்தாா். ஆனால், நீதிமன்றத்தில் ஆஜராகாமல் கடந்த 3 மாதங்களாக தலைமறைவாகி விட்டாா்.

இதையடுத்து, நீதிமன்றம் அவருக்கு பிடியாணை பிறப்பித்தது. இந்நிலையில், அவரை கங்கைகொண்டான் போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

மற்றொரு நபா்: நொச்சிகுளம் கிருஷ்ணாபுரத்தை சோ்ந்தவா் சீனிவாசன்(35). பெண்ணை அவதூறாகப் பேசிய வழக்கில் கைது செய்யப்பட்டு, நிபந்தனை ஜாமீனில் வெளிவந்தவா் ஒரு மாதமாக தலைமறைவாகி விட்டாா். இதையடுத்து, நீதிமன்றம் அவருக்கு பிடியானை பிறப்பித்தது. இந்த நிலையில், அவரை தாலுகா போலீஸாா் கைது செய்தனா்.