செப். 15 முதல் தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்!இந்தியாவில் மீண்டும் செயல்படத் தொடங்கிய டெலிகிராம்!மத்திய அரசுடன் மோதல் போக்கை விரும்பவில்லை! முதல்வர் விஜய் உலக சாதனை படைத்த மெஸ்ஸி: நாக்-அவுட் சுற்றுக்கு முன்னேறிய அர்ஜென்டினா!முதல்வர் விஜய்யின் உரைக்கு எதிர்ப்பு! திமுக எம்எல்ஏக்கள் வெளிநடப்பு!ஏய் என்ற வார்த்தை அவைக் குறிப்பில் நீக்க வேண்டும்: அமைச்சர் ராஜ்மோகன்திரிணமூல் தலைவர் பதவியிலிருந்து மமதா நீக்கம்!தமிழகத்தில் 11 மாதங்களாக சட்டம் - ஒழுங்கு டிஜிபியே இல்லை! விஜய்
/

நான்குனேரி அருகே ரூ. 75 லட்சம் கள்ள நோட்டுகள் சிக்கியது: 4 பேர் கைது

தேசிய நெடுஞ்சாலையில் வாகன சோதனையின் போது கள்ள நோட்டுகள் சிக்கியது.

News image

பறிமுதல் செய்யப்பட்ட கள்ளநோட்டுகள், செல்போன்கள். - Din

Updated On :6 ஆகஸ்ட் 2024, 11:28 am IST

நான்குனேரி அருகே தேசிய நெடுஞ்சாலையில் ரூ. 75 லட்சம் மதிப்பிலான கள்ளநோட்டை பறிமுதல் செய்த காவல்துறையினர் 4 பேரை கைது செய்துள்ளனர்.

நெல்லை மாவட்டம் நான்குனேரி தேசிய நெடுஞ்சாலையில் மூன்றடைப்பு போலீஸார் தாழைகுளம் சந்திப்பு அருகே செவ்வாய்க்கிழமை காலை வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது அந்த வழியாக நாகர்கோவில் நோக்கி வந்த ஒரு பொலிரோ வாகனத்தை நிறுத்தி சோதனையிட்டனர். அதில் இருந்தவர்கள் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்ததால் சந்தேகம் அடைந்த போலீஸார் வாகனத்தில் சோதனையிட்டனர். அதில் 75 லட்சம் ரூபாய் கள்ள நோட்டு இருப்பது தெரிய வந்தது.

இதனை அடுத்து வாகனத்தில் கள்ள நோட்டுகளுடன் வந்த சிவகாசியை சார்ந்த சீமைசாமி , கோபாலகிருஷ்ணன் மற்றும் சங்கரன்கோவிலைச் சார்ந்த கிருஷ்ண சங்கர், தங்கராஜ் ஆகிய 4 பேர் மீது மூன்றடைப்பு போலீஸார் வழக்கு பதிவு செய்தனர் .

மேலும் அவர்களிடமிருந்து எட்டு செல்போன்கள் ஒரு அரிவாள் மற்றும் கள்ள நோட்டு தயாரிக்கும் சில உபகரணங்கள் ஆகியவற்றையும் பறிமுதல் செய்தனர்.

மேலும் கள்ளநோட்டு கும்பலில் தொடர்புடையவர்கள் குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.