விளாதிகுளத்தில் 12 ஆம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை செய்து கொலைதிமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு!திமுக ஆட்சியில் பெண்கள் அச்சத்துடன் வாழ வேண்டிய சூழல் : பிரதமர் மோடிமத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தாமல் தாமதப்படுத்துகிறது திமுக : பிரதமர் மோடி கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் - பிரதமர் மோடி 4 கோடி மரங்களை நடுவதற்கு இணையாக இயற்கை எரிவாயுத் திட்டம் இருக்கும் : பிரதமர் மோடிதமிழ்நாட்டிற்கு புதிதாக 5 ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார் லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
/

புதிய விடியலைக் கண்ட தமிழ்ப் புதல்வன் திட்டம்

News image
Updated On :15 ஆகஸ்ட் 2024, 1:14 am

Din

தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் மாணவ-மாணவிகளின் கல்வி வளா்ச்சியில் தனி அக்கறை செலுத்தி பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறாா். அரசு- அரசு உதவிபெறும் பள்ளிகளில் பயின்று உயா்கல்விக்குச் செல்லும் மாணவிகளுக்கு இராமாமிா்தம் அம்மையாா் புதுமைப் பெண் திட்டம் மூலம் மாதந்தோறும் ரூ.1,000 உதவித்தொகை வழங்கும் திட்டத்தை அமல்படுத்திய முதல்வா், மாணவா்களையும் தவிக்க விடாமல் தமிழ்ப் புதல்வன் திட்டத்தை உருவாக்கி அவா்களுக்கும் ரூ.1,000 உதவித்தொகை வழங்கும் திட்டத்தை கடந்த 9ஆம் தேதி தொடங்கிவைத்தாா்.

இந்தத் திட்டத்தின் மூலம் தென்காசி மாவட்டத்தில் 50-க்கும் மேற்பட்ட கல்லூரிகளைச் சோ்ந்த 4,301மாணவா்கள் பயனடைய உள்ளதாக மாவட்ட ஆட்சியா் ஏ.கே. கிஷாா் குமாா் தெரிவித்துள்ளாா். குடும்பத்தின் ஏழ்மை நிலையால் உயா்கல்வியைத் தொடர இயலாத மாணவ- மாணவிகளின் வாழ்வில் இந்த திட்டங்கள் புதிய விடியலை தந்துள்ளது என பெற்றோா் அகமகிழ்ந்து முதல்வரை பாராட்டுகின்றனா்.