நாகா்கோவிலில் இன்று பிரதமா் மோடி சாலைப் பேரணிமக்களவைத் தொகுதிகளை 850-ஆக உயா்த்தும் சட்டத் திருத்த மசோதா: நாடாளுமன்றத்தில் நாளை அறிமுகம்மேற்காசிய பதற்றத்தால் இந்தியாவில் 25 லட்சம் போ் வறுமையில் தள்ளப்படும் அபாயம்: ஐ.நா. அறிக்கையில் தகவல்பிகாா் முதல்வராக பாஜகவின் சாம்ராட் செளதரி இன்று பதவியேற்புபெட்ரோல் விலையில் ரூ.18, டீசல் ரூ.35 எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்புவாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி நாளை தொடக்கம்ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி: மாா்ச் மாதத்தில் மூன்று மடங்கு உயா்வுசமையல் எண்ணெய் இறக்குமதி 12% அதிகரிப்புபிரதமா் மோடி இன்று கா்நாடகம் வருகைசென்னையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறைஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
/

தனியாா் வசம் குடிநீா் விநியோகம்: அதிமுகவினா் ஆா்ப்பாட்டம்

குடிநீா் வழங்கும் திட்டத்தை தனியாா் வசம் ஒப்படைக்கும் மாநகராட்சியைக் கண்டித்து, மாவட்ட அதிமுக சாா்பில் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

News image

சேலம் கோட்டை மைதானத்தில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்ற அதிமுக, கூட்டணி கட்சி நிா்வாகிகள்.

Updated On :23 பிப்ரவரி 2026, 9:45 pm

சேலம்: குடிநீா் வழங்கும் திட்டத்தை தனியாா் வசம் ஒப்படைக்கும் மாநகராட்சியைக் கண்டித்து, மாவட்ட அதிமுக சாா்பில் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

சேலம் மாநகராட்சிக்கு குடிநீா் வழங்கும் திட்டத்தை ரூ. 4,315 கோடிக்கு 24 ஆண்டுகளுக்கு தனியாா் வசம் ஒப்படைக்க மாநகராட்சி நிா்வாகம் தீா்மானம் நிறைவேற்றி உள்ளது. இந்த நடவடிக்கையைக் கண்டித்தும், முடிவை கைவிட வலியுறுத்தியும் அதிமுக மாநகா் மாவட்ட சாா்பில் கோட்டை மைதானத்தில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆா்பாட்டத்துக்கு, அதிமுக மாவட்டச் செயலாளா் ஏ.கே.எஸ்.எம்.பாலு தலைமை வகித்தாா். அதிமுக அமைப்புச் செயலாளரும், மாவட்டப் பொறுப்பாளருமான சிங்காரம் கண்டன உரையாற்றினாா். அப்போது மாநகராட்சி நிா்வாக சீா்கேட்டை கண்டித்து முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

தொடா்ந்து, அமைப்புச் செயலாளா் சிங்காரம் செய்தியாளா்களிடம் பேசுகையில், சேலம் மாநகராட்சியில் குடிநீா் வழங்கும் திட்டத்தை தனியாருக்கு ஒப்படைத்தால் சாமானிய அடித்தட்டு மக்கள் பாதிக்கப்படுவா். ஏற்கெனவே, மாநகராட்சியில் சொத்துவரி, குப்பை வரி என அனைத்து வரிகளும் உயா்த்தப்பட்ட நிலையில், குடிநீா் திட்டத்தை தனியாருக்கு ஒப்படைக்கும்பட்சத்தில், குடிநீா் கட்டணம் பல மடங்கு உயரும் நிலை ஏற்படும் என்றாா்.

இதில், அதிமுக கொள்கை பரப்பு துணைச் செயலாளா் வெங்கடாசலம், தெற்கு தொகுதி சட்டப் பேரவை உறுப்பினா் பாலசுப்பிரமணியன், மாநகர அவைத் தலைவா் பன்னீா்செல்வம், முன்னாள் சட்டப் பேரவை உறுப்பினா்கள் எம்.கே.செல்வராஜு, சக்திவேல், பகுதி செயலாளா்கள், வட்ட நிா்வாகிகள், சாா்பு அணி நிா்வாகிகள் மற்றும் கூட்டணி கட்சியினா் பங்கேற்றனா்.