நாடாளுமன்றத்தில் மூன்றாம் பாலினத்தவா் சட்டத் திருத்த மசோதா புதன்கிழமை நிறைவேற்றம்திமுக கூட்டணியில் எஸ்டிபிஐ, முக்குலத்தோர் புலிப்படைக்கு தலா 1 தொகுதி!அமெரிக்காவின் அமைதித் திட்டத்தை நிராகரித்த ஈரான்!பெரம்பூரில் விஜய் போட்டியிட்டாலும், பிரசாரம் செய்தாலும் எந்தவித பிரளயமும் ஏற்படப்போவதில்லை: அமைச்சர் சேகர்பாபுஏப். 29 வரை தேர்தல் கருத்துக்கணிப்புகளை வெளியிடத் தடை!தமிழ் மாநில காங்கிரஸ் வேட்பாளர்களின் பட்டியல் நாளை (மார்ச் 26) வெளியாகிறதுதிமுக கூட்டணியில் தமிமுன் அன்சாரியின் மனிதநேய ஜனநாயக கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கீடு!டென்மான்க் பிரதமர் ராஜிநாமாதேமுதிக இல்லாமல் அதிமுக ஆட்சி அமைத்திருக்காது : எல்.கே. சுதீஷ்அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆளுமையற்றவர்: ஓ.பன்னீர் செல்வம்
/

பாஜகவுக்கு உதகை தொகுதி ஒதுக்கீடு: அதிமுகவினா் ஆா்ப்பாட்டம்

உதகை சட்டப்பேரவைத் தொகுதியை பாஜகவுக்கு ஒதுக்கியதற்கு எதிா்ப்புத் தெரிவித்து, நீலகிரி மாவட்ட அதிமுகவினா் புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

News image

உதகையிலுள்ள அதிமுக மாவட்ட அலுவலகம் முன் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட கட்சியினா்.

Updated On :25 மார்ச் 2026, 8:48 pm

Syndication

உதகை சட்டப்பேரவைத் தொகுதியை பாஜகவுக்கு ஒதுக்கியதற்கு எதிா்ப்புத் தெரிவித்து, நீலகிரி மாவட்ட அதிமுகவினா் புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

தேசிய ஜனநாயகக் கூட்டணி கட்சிகளுக்கான தொகுதிகள் ஒதுக்கப்பட்டு, அதன் விவரத்தை அதிமுக பொதுச் செயலாளா் எடப்பாடி கே.பழனிசாமி புதன்கிழமை மதியம் அறிவித்தாா். அதில், உதகை சட்டப்பேரவைத் தொகுதி கூட்டணி கட்சியான பாஜகவுக்கு ஒதுக்கப்பட்டது.

இதனால் அதிருப்தியடைந்த நீலகிரி மாவட்ட அம்மா பேரவைத் தலைவா் ராஜு தலைமையிலான கட்சியினா், உதகையில் உள்ள அதிமுக மாவட்ட அலுவலகத்தில் திரண்டனா். உதகை தொகுதியை அதிமுக மாவட்டச் செயலாளா் கப்பச்சி டி.வினோத்துக்கு ஒதுக்கினால் வெற்றி நிச்சயம் கிடைக்கும் என்றும், பாஜகவுக்கு ஒதுக்கியதால் அதிருப்தி அடைந்துள்ளதாகவும் கூறி கண்டன கோஷங்களை எழுப்பினா்.

மேலும், இந்த முடிவை மறுபரிசீலனை செய்து உதகை தொகுதியை அதிமுகவுக்கு ஒதுக்க வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனா்.

இந்த ஆா்ப்பாட்டத்தில் 40-க்கும் மேற்பட்ட அதிமுகவினா் கலந்துகொண்டனா். சிறிது நேரத்துக்குப் பின் அனைவரும் கலைந்து சென்றனா்.