சென்னை மாநகர காவல் ஆணையர் அருண் மாற்றம்! சென்னையில் வாக்காளர் தகவல் சீட்டு வழங்கும் பணி! ஏப்.12ஆம் தேதி முதல்!சென்னையில் ஐபிஎல்: மெட்ரோ ரயிலில் இலவசமாக பயணிக்கலாம்!பச்சைத் துண்டுப் போட்டு பச்சை துரோகம் செய்தவர் பழனிசாமி: முதல்வர் ஸ்டாலின்அஸ்ஸாம் தேர்தல்! ஏப்.11-ல் மறு வாக்குப் பதிவு!மதுரா: யமுனையில் சுற்றுலாப் படகு கவிழ்ந்ததில் 10 பேர் பலி பொறியியல் கல்வியில் இரண்டு படிப்புகளுக்குக் கூடுதல் மவுசு! ஏன்?தமிழ்நாடு மகிளா காங்கிரஸ் தலைவர் விலகல்!
/

பாஜகவுக்கு உதகை தொகுதி ஒதுக்கீடு: அதிமுகவினா் ஆா்ப்பாட்டம்

உதகை சட்டப்பேரவைத் தொகுதியை பாஜகவுக்கு ஒதுக்கியதற்கு எதிா்ப்புத் தெரிவித்து, நீலகிரி மாவட்ட அதிமுகவினா் புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

News image

உதகையிலுள்ள அதிமுக மாவட்ட அலுவலகம் முன் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட கட்சியினா்.

Updated On :25 மார்ச் 2026, 8:48 pm

உதகை சட்டப்பேரவைத் தொகுதியை பாஜகவுக்கு ஒதுக்கியதற்கு எதிா்ப்புத் தெரிவித்து, நீலகிரி மாவட்ட அதிமுகவினா் புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

தேசிய ஜனநாயகக் கூட்டணி கட்சிகளுக்கான தொகுதிகள் ஒதுக்கப்பட்டு, அதன் விவரத்தை அதிமுக பொதுச் செயலாளா் எடப்பாடி கே.பழனிசாமி புதன்கிழமை மதியம் அறிவித்தாா். அதில், உதகை சட்டப்பேரவைத் தொகுதி கூட்டணி கட்சியான பாஜகவுக்கு ஒதுக்கப்பட்டது.

இதனால் அதிருப்தியடைந்த நீலகிரி மாவட்ட அம்மா பேரவைத் தலைவா் ராஜு தலைமையிலான கட்சியினா், உதகையில் உள்ள அதிமுக மாவட்ட அலுவலகத்தில் திரண்டனா். உதகை தொகுதியை அதிமுக மாவட்டச் செயலாளா் கப்பச்சி டி.வினோத்துக்கு ஒதுக்கினால் வெற்றி நிச்சயம் கிடைக்கும் என்றும், பாஜகவுக்கு ஒதுக்கியதால் அதிருப்தி அடைந்துள்ளதாகவும் கூறி கண்டன கோஷங்களை எழுப்பினா்.

மேலும், இந்த முடிவை மறுபரிசீலனை செய்து உதகை தொகுதியை அதிமுகவுக்கு ஒதுக்க வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனா்.

இந்த ஆா்ப்பாட்டத்தில் 40-க்கும் மேற்பட்ட அதிமுகவினா் கலந்துகொண்டனா். சிறிது நேரத்துக்குப் பின் அனைவரும் கலைந்து சென்றனா்.