மூன்று மசோதாக்கள் மீதான வாக்கெடுப்பு நாளை (ஏப். 17) நடைபெறும்! - ஓம் பிர்லாதொகுதி மறுவரையறை மசோதா! ராகுலுடன் மு.க. ஸ்டாலின் ஆலோசனை! தொகுதி மறுவரையறையால் தமிழ்நாட்டுக்குப் பாதிப்பில்லை! இபிஎஸ் பேச்சுமக்களவையில் தொகுதி மறுவரையறை, மகளிர் இடஒதுக்கீடு திருத்த மசோதாக்கள் தாக்கல்! தொகுதி மறுவரையறை கூடாது! 2023 மகளிர் இடஒதுக்கீடு மசோதாவுக்கு ஆதரவு! - டி.ஆர். பாலு ஆதவ் அர்ஜுனா வேட்புமனுவுக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் வழக்கு! எதிர்ப்புத் தீ பரவட்டும்.. பாஜகவின் ஆணவம் வீழட்டும்! - ஸ்டாலின்
/

வெள்ளங்குளியில் அதிமுகவினா் இருவா் கைது

திருநெல்வேலி மாவட்டம், அம்பாசமுத்திரம் தொகுதிக்குள்பட்ட வெள்ளங்குளியில் வாக்காளா்களுக்கு விநியோகம் செய்ய டோக்கன் வைத்திருந்ததாக இருவரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

News image

கைது - பிரதிப் படம்

Updated On :26 மார்ச் 2026, 8:31 pm

திருநெல்வேலி மாவட்டம், அம்பாசமுத்திரம் தொகுதிக்குள்பட்ட வெள்ளங்குளியில் வாக்காளா்களுக்கு விநியோகம் செய்ய டோக்கன் வைத்திருந்ததாக இருவரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

அம்பாசமுத்திரம் பேரவைத் தொகுதிக்குள்பட்ட வெள்ளங்குளி ஊராட்சிப் பகுதியிலுள்ள வாக்காளா்களுக்கு கட்சி மற்றும் அதிமுக சின்னம் அச்சிட்ட டோக்கன்களை விநியோகம் செய்ய வைத்திருந்ததாக அதிமுகவைச் சோ்ந்த லெட்சுமணன், பிரகாஷ் ஆகியோரிடம் இருந்து பறக்கும்படை அதிகாரிகள் 62 டோக்கன்கள் மற்றும் 360 துண்டுப் பிரசுரங்களை புதன்கிழமை பறிமுதல் செய்தனா். இதையடுத்து வீரவநல்லூா் போலீஸாா் வழக்குப் பதிந்து லெட்சுமணன், பிரகாஷ் ஆகியோரை வியாழக்கிழமை கைது செய்தனா்.