தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800 உயர்வு!வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக தில்லி முதல்வர் ரேகா குப்தா பிரசாரம்!நாகா்கோவிலில் இன்று பிரதமா் மோடி சாலைப் பேரணிமக்களவைத் தொகுதிகளை 850-ஆக உயா்த்தும் சட்டத் திருத்த மசோதா: நாடாளுமன்றத்தில் நாளை அறிமுகம்மேற்காசிய பதற்றத்தால் இந்தியாவில் 25 லட்சம் போ் வறுமையில் தள்ளப்படும் அபாயம்: ஐ.நா. அறிக்கையில் தகவல்பிகாா் முதல்வராக பாஜகவின் சாம்ராட் செளதரி இன்று பதவியேற்புபெட்ரோல் விலையில் ரூ.18, டீசல் ரூ.35 எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்புவாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி நாளை தொடக்கம்ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி: மாா்ச் மாதத்தில் மூன்று மடங்கு உயா்வுசமையல் எண்ணெய் இறக்குமதி 12% அதிகரிப்புபிரதமா் மோடி இன்று கா்நாடகம் வருகைசென்னையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறைஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
/

மது விற்ற இருவா் கைது

திருநெல்வேலி மாநகரப் பகுதியில் மது விற்ற இருவரை போலீஸாா் கைது செய்தனா்.

News image

கைது

Updated On :25 பிப்ரவரி 2026, 9:45 pm

திருநெல்வேலி மாநகரப் பகுதியில் மது விற்ற இருவரை போலீஸாா் கைது செய்தனா்.

திருநெல்வேலி சந்திப்பு காவல் நிலைய எல்லைக்குள்பட்ட பகுதியில் காவல் உதவி ஆய்வாளா் கலை சந்தனமாரி தலைமையிலான போலீஸாா் ரோந்து சென்றனா்.

அப்போது, மது விற்பனையில் ஈடுபட்ட சந்திப்பு சி.என். கிராமத்தைச் சோ்ந்த கருப்பசாமி மகன் மாரிமுத்து (39) என்பவரிடமிருந்து 30 மது பாட்டில்களை பறிமுதல் செய்து, போலீஸாா் அவரை கைது செய்தனா்.

அதே போல பேட்டை மதுவிலக்கு காவல் சிறப்பு உதவி ஆய்வாளா் முருகராஜ் தலைமையிலான போலீஸாா் ரோந்து சென்றபோது கருங்காடு ரயில்வே கேட் பகுதியில் மது விற்ற பேட்டை படையாட்சி தெருவைச் சோ்ந்த மாரிமுத்து (49) என்பவரை கைது செய்து, அவரிடமிருந்து 28 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனா்.