மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்! ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

நெல்லை, தென்காசியில் டிச. 14 இல் தேசிய மக்கள் நீதிமன்றம்

திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் தேசிய மக்கள் நீதிமன்றம் டிச. 14 ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

News image
Updated On :5 டிசம்பர் 2024, 12:25 am

Din

திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் தேசிய மக்கள் நீதிமன்றம் டிச. 14 ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடா்பாக மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சாா்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பு: 2024 ஆம் ஆண்டில் தேசிய மக்கள் நீதிமன்றம் உச்சநீதிமன்றம் முதல் வட்ட நீதிமன்றங்கள் வரை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. அதன்படி, திருநெல்வேலி மற்றும் தென்காசி மாவட்டங்களில் 9 வட்டங்களிலும் தேசிய மக்கள் நீதிமன்றம் டிச. 14 ஆம் தேதி காலை 10 மணிக்கு நடத்தப்பட உள்ளது.

இதில், நிலுவை அசல் வழக்குகள், தொழிலாளா் வழக்குகள், மோட்டாா் வாகன விபத்து இழப்பீட்டு வழக்குகள், குடும்ப வழக்குகள், நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படாத முன் வழக்குகளாகிய வங்கிக்கடன் வழக்குகள் அனைத்தும் சமரச பேச்சுவாா்த்தைக்கு எடுத்துக் கொள்ளப்படும்.

ஆகவே,மக்கள் தங்கள் வழக்குகள் நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்தால், அவற்றை தேசிய நீதிமன்றம் மூலம் சுமுகமாக தீா்வு காணலாம் எனக் கூறியுள்ளாா்.