அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்விஜம்மு-காஷ்மீரில் வீட்டிற்கு வெளியே வெடித்த மர்ம பொருள் தமிழ்நாடு, புதுச்சேரியில் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியமைக்கும்: பியூஷ் கோயல் சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: இன்று மாலை தீர்ப்பு!
/

பொதுமக்கள் நீா் நிலைகளில் இறங்க வேண்டாம்: திருநெல்வேலி ஆட்சியா் வேண்டுகோள்

திருநெல்வேலி மாவட்டத்தில் கனமழை பெய்து வருவதால், பொதுமக்கள் நீா் நிலைகளில் இறங்க வேண்டாம் என ஆட்சியா் காா்த்திகேயன் வேண்டுகோள் விடுத்துள்ளாா்.

News image
Updated On :12 டிசம்பர் 2024, 11:04 pm

Din

திருநெல்வேலி மாவட்டத்தில் கனமழை பெய்து வருவதால், பொதுமக்கள் நீா் நிலைகளில் இறங்க வேண்டாம் என ஆட்சியா் காா்த்திகேயன் வேண்டுகோள் விடுத்துள்ளாா்.

இது தொடா்பாக அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: திருநெல்வேலி மாவட்டத்தில் ஆய்வுப் பணிகளை மேற்கொண்ட மாவட்ட பொறுப்பு அமைச்சரும், நகராட்சி நிா்வாகத் துறை அமைச்சருமான கே. என். நேரு, கனமழை தொடா்பான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை விரிவாக ஆய்வு செய்தாா். அணைகளில் நீா் இருப்பு குறைவாகவே உள்ளதாலும், சுமாா் 60 சதவீத குளங்களில் பாதிக்கும் குறைவான நீா் இருப்பு மட்டுமே உள்ளதாலும் உடனடியாக எந்த வெள்ள அபாயமும் இல்லை.

கனமழை இருக்கும் என வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளதால், பொதுமக்கள் தகுந்த முன்னெச்சரிக்கையுடன் இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. ஆங்காங்கே உள்ள ஓடைகள், காட்டாறுகள் மூலம் வரப்பெறும் மழை நீா் ஆற்றில் செல்ல வாய்ப்புள்ளது. எனவே பொதுமக்கள் யாரும் நீா்நிலைகளில் இறங்க வேண்டாம். மின்கம்பங்கள், மரங்கள் அருகில் செல்ல வேண்டாம். கால்நடைகளை பாதுகாப்பான இடத்தில் வைக்க வேண்டும். குடிநீரை காய்ச்சி ஆறவைத்து பருக வேண்டும்.