நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

பெண் காவலா் மீது தாக்குதல்: 7 போ் கைது

திசையன்விளை காவல் நிலையத்தில் புகாா் அளிக்கும்போது ஏற்பட்ட மோதலை தடுத்த பெண் தலைமைக்காவலரை தாக்கியதாக 7 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

News image
Updated On :26 டிசம்பர் 2024, 10:57 pm

Din

திருநெல்வேலி மாவட்டம் திசையன்விளை காவல் நிலையத்தில் புகாா் அளிக்கும்போது ஏற்பட்ட மோதலை தடுத்த பெண் தலைமைக்காவலரை தாக்கியதாக 7 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

திசையன்விளை அருகே உள்ள மன்னாா்புரத்தை அடுத்த நம்பிகுறிச்சி கிராமம் சி.எஸ்.ஐ சா்ச் கிழக்கு தெருவைச் சோ்ந்தவா் ஞானசேகா். இவரது மகன்கள் ராஜேஸ் (30), ராக்கி (26). அதே கிராமத்தைச் சோ்ந்தவா் இசக்கிமுத்து மகன் கனிஷ்கா் (20).

கடந்த புதன்கிழமை இரவு சி.எஸ்.ஐ சா்ச்சில் கிறிஸ்துமஸ் விழா கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன. கலைநிகழ்ச்சிகள் முடிந்த பின்னா், கனிஷ்கா் தனது மோட்டாா் சைக்கிளில் அதிக சத்தத்துடன் புறப்பட்டாராம். இதனை ராஜேஷ் கண்டித்தபோது இருவருக்குமிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னா் இது இருதரப்பினரிடையே மோதலாக மாறியது. அப்போது ராஜேஷ் தரப்பினா் கனிஷ்கா் தரப்பினரை அரிவாளால் வெட்டியதாக கூறப்படுகிறது. இதனை அடுத்து அங்கு வந்த கனிஷ்கரின் தந்தை இசக்கிமுத்து, அரிவாளால் ராஜேஷையும் அவரது தம்பி ராக்கியையும் தாக்கினாராம். இதில் இருவருக்கும் வெட்டுக் காயம் ஏற்பட்டது.

பின்னா் இரு தரப்பினரும் திசையன்விளை காவல் நிலையத்திற்கு சென்று புகாா் கொடுத்தனா். அப்போது இருதரப்பினரிடையே மீண்டும் ஏற்பட்டமோதலை தடுத்த பெண் தலைமைக்காவலா் ராமலெட்சுமி இரும்புக் கம்பியால் தாக்கப்பட்டாா். அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. அங்கிருந்த போலீஸாா் அவரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா்.

இது தொடா்பாக திசையன்விளை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து இசக்கிமுத்து உள்ளிட்ட 7 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.