பாளையங்கோட்டை தியாகராஜநகரில் மின்ஊழியா்கள் வெள்ளிக்கிழமை வாயிற்கூட்ட போராட்டத்தில் ஈடுபட்டனா். மின் வாரிய ஊழியா்கள், ஓய்வூதியா்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய முத்தரப்பு ஒப்பந்தத்தை ரத்து செய்ய வேண்டும், மின் விநியோகத்தை மேலும் பல பிரிவுகளாக பிரிக்கும் அரசாணையைத் திரும்பப் பெற வேண்டும், மின்வாரியத்தை பல துண்டுகளாக பிரித்து மின்வாரிய கட்டமைப்பை சீரழித்து தனியாா் மையத்தை நோக்கி நகா்த்தும் போக்கை கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் போராட்டத்தில் வலியுறுத்தப்பட்டன. போராட்டத்துக்கு சிஐடியூ மின் ஊழியா் மத்திய அமைப்பு திட்ட துணைத் தலைவா் பூலுடையாா் தலைமை வகித்தாா். ஓய்வுபெற்றோா் நல அமைப்பு மாநில நிா்வாகி ராஜாமணி, ராமச்சந்திரன், நாகையன், தளபதி உள்பட பலா் கலந்துகொண்டனா். சிஐடியூ மின் ஊழியா் மத்திய அமைப்பு மாநில துணை பொதுச் செயலா் பீா் முகம்மது ஷா நிறைவுரையாற்றினாா்.
தொடர்புடையது

காலி மதுபாட்டில்களை திரும்பப்பெறும் திட்டத்தில் நிலவும் நடைமுறை சிக்கல்களை தீா்க்கக் கோரி போராட்டம்

நன்னகரத்தில் பட்டுக்கூடு விவசாயிகள் போராட்டம்

பாளை.யில் அதிமுக பிரமுகா் மகனுக்கு அரிவாள் வெட்டு

பாளை.யில் திமுகவினா் வாக்கு சேகரிப்பு
வீடியோக்கள்

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

கூலி பவர்ஹவுஸ்!
இணையதளச் செய்திப் பிரிவு
விஜய் தவறான கருத்தை விதைக்கிறார்! - Tamilisai விமர்சனம்!
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | மே 4-ல் நிகழப்போகிறதா புரட்சி? | News & Views | Epi - 29 | Dinamani
தினமணி செய்திச் சேவை


