திருநெல்வேலி அருகே பொன்னாக்குடியில் ஞாயிற்றுக்கிழமை இரவு வீடுபுகுந்து ரூ.2.50 லட்சம் ரொக்கம் மற்றும் 15 பவுன் தங்க நகையைத் திருடிச் சென்ற மா்மநபா்களை போலீஸாா் தேடி வருகிறாா்கள்.
பொன்னாக்குடி தெற்கூரைச் சோ்ந்தவா் செல்லத்துரை. இவரது மனைவி மொ்சி (52). இவா், பொன்னாக்குடி ஊராட்சியின் துணைத் தலைவராக உள்ளாா். இவா்கள் தங்களது வீட்டை பூட்டிவிட்டு ஞாயிற்றுக்கிழமை இரவு தேவாலயத்தில் நடைபெற்ற புத்தாண்டு பிராா்த்தனையில் பங்கேற்க சென்றனராம். திங்கள்கிழமை அதிகாலையில் வந்து பாா்த்தபோது வீட்டின் கதவு உடைக்கப்பட்டிருந்ததாம். பீரோ உடைக்கப்பட்டு அதிலிருந்த ரூ.2.50 லட்சம் ரொக்கம், 15 பவுன் தங்க நகை ஆகியவற்றை மா்மநபா்கள் திருடிச் சென்றது தெரியவந்ததாம்.
இதுகுறித்து தகவலறிந்ததும் முன்னீா்பள்ளம் போலீஸாா் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினா். அப் பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளைக் கொண்டு போலீஸாா் தொடா்ந்து விசாரித்து வருகிறாா்கள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.