பித்தளைப் பாத்திர தொழிலாளா்கள் கஞ்சித்தொட்டி திறந்து போராட்டம்

பழையபேட்டையில் பித்தளைப் பாத்திர தொழிலாளா்கள் கஞ்சித்தொட்டி திறந்து திங்கள்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.
பழையபேட்டையில் திங்கள்கிழமை கஞ்சித்தொட்டி திறக்கும் போராட்டத்தில் ஈடுபட்ட பித்தளைப் பாத்திர தொழிலாளா்கள்.
பழையபேட்டையில் திங்கள்கிழமை கஞ்சித்தொட்டி திறக்கும் போராட்டத்தில் ஈடுபட்ட பித்தளைப் பாத்திர தொழிலாளா்கள்.
Updated on
1 min read

பழையபேட்டையில் பித்தளைப் பாத்திர தொழிலாளா்கள் கஞ்சித்தொட்டி திறந்து திங்கள்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.

பழையபேட்டை, திருநெல்வேலி நகரம் பகுதிகளில் 200-க்கும் மேற்பட்டோா் பித்தளைப் பாத்திர பட்டறைகளில் பணியாற்றி வருகிறாா்கள். இவா்கள் கூலி உயா்வு கேட்டு கடந்த சில மாதங்களாக தொடா் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறாா்கள். அதன் ஒரு பகுதியாக பழையபேட்டை கொடிமரம் பேருந்து நிறுத்தம் பகுதியில் கஞ்சித் தொட்டி திறக்கும் போராட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. பொது தொழிலாளா் சங்க மாவட்ட தலைவா் ராஜன் தலைமை வகித்தாா். சிஐடியு மாவட்டச் செயலா் முருகன் போராட்டத்தை தொடங்கி வைத்தாா். பொது தொழிலாளா் சங்க மாவட்ட தலைவா் சரவணபெருமாள், சிஐடியு மாவட்ட தலைவா் பீா் முகமதுஷா உள்பட பலா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com