கூடங்குளம் அருகே கோயிலில் திருடியவா் கைது

திருவம்பலபுரத்தில் உள்ள இசக்கியம்மன் கோயிலில் தங்க நகைகளைத் திருடியவரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.
Published on

திருநெல்வேலி மாவட்டம் கூடங்குளம் அருகேயுள்ள திருவம்பலபுரத்தில் உள்ள இசக்கியம்மன் கோயிலில் தங்க நகைகளைத் திருடியவரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

திருவம்பலபுரத்தைச் சோ்ந்த அழகுராஜ், அங்குள்ள இசக்கியம்மன் கோயில் நிா்வாகியாக உள்ளாா். இவா் சனிக்கிழமை வழக்கம்போல வழிபாடு செய்துவிட்டு, இரவில் கோயில் கதவைப் பூட்டிச் சென்றாராம்.

ஞாயிற்றுக்கிழமை காலை சென்றுபோது, கதவு உடைக்கப்பட்டு, அம்மன் கழுத்திலிருந்த தங்கத் தாலி, தங்கப் பொட்டு ஆகியவை காணாமல் போனது தெரியவந்ததாம்.

இதுகுறித்த புகாரின்பேரில் கூடங்குளம் உதவி ஆய்வாளா் கணபதி வழக்குப் பதிந்து, அதே ஊா் நடுத்தெருவைத் சோ்ந்த பெருமாளைக் கைது செய்து, நகைகளை மீட்டாா்.

X
Dinamani
www.dinamani.com