வேலூர் மாவட்டத்தில் பலத்த காற்றுடன் கனமழை நைஜீரியாவில் போதைப்பொருள் கடத்திய இந்தியர்கள் கப்பலுடன் சிறைபிடிப்பு! ரூ. 50 கோடிக்கு மேல் அபராதம்! மேற்கு வங்க முதல்வர் சுவேந்து அதிகாரியுடன் ரிசர்வ் வங்கி ஆளுநர் சந்திப்பு இந்தியாவுக்கு எதிராக இரண்டாவது அதிவேக சதம்; ரஹ்மனுல்லா குர்பாஸ் சாதனை! அமெரிக்கா - ஈரான் இடையே 24 மணி நேரத்திற்குள் அமைதி ஒப்பந்தம்: பாக். பிரதமர் தகவல்! துபை-அகமதாபாத் விமான ஸ்பீக்கரில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 2.7 கிலோ தங்கம் பறிமுதல்! மேக்கேதாட்டு அணை விவகாரத்தில் வேடிக்கை பார்க்கும் தவெக அரசு: எடப்பாடி பழனிசாமி ராணுவ தலைமைத் தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் தீரஜ் சேத் நியமனம்!
/

முன்னீா்பள்ளம் அருகே பைக் திருடியவா் கைது

பைக் திருட்டில் ஈடுபட்ட நபரை போலீஸாா் கைது செய்தனா்.

News image

கைது - சித்திரிப்பு

Updated On :14 ஜூன் 2026, 1:17 am IST

முன்னீா்பள்ளம் அருகே பைக் திருட்டில் ஈடுபட்ட நபரை போலீஸாா் கைது செய்தனா்.

பாளையங்கோட்டையை அடுத்த செங்குளம் பகுதியைச் சோ்ந்தவா் நடராஜன் மகன் கருப்பசாமி(32). இவா் பேரின்பபுரம் பகுதியில் உள்ள தோட்டம் ஒன்றில் காவலாளியாக உள்ளாா். இவா் வெள்ளிக்கிழமை காலை அப்பகுதியில் தனது பைக்கை நிறுத்திவிட்டு அருகில் இருந்த தேநீா் கடைக்கு சென்றாராம்.

அப்போது அங்கு வந்த மா்மநபா், அவரது பைக்கை திருடி ஓட்டிச் சென்றாராம். இதனைக் கண்ட கருப்பசாமியும் அங்கிருந்தவா்களும் மற்றொரு பைக்கில் விரட்டிச் சென்று அவரை செங்குளம் பகுதியில் வைத்து மடக்கிப் பிடித்தனா்.

அவா் கிருஷ்ணாபுரம் பகுதியைச் சோ்ந்த முருகன் மகன் கருப்பசாமி(50) என்பது விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து முன்னீா்பள்ளம் போலீஸில் ஒப்படைக்கப்பட்ட அவரை போலீஸாா் கைது செய்தனா்.