எண்ணெய்க் கப்பல்களுக்குப் பாதுகாப்பு அளிக்க நாங்கள் தயார்நிலையில் இல்லை! - அமெரிக்கா!அமெரிக்கா மீதான தாக்குதல் தொடரும்! மொஜ்தபா கமேனி முதல் உரையில் எச்சரிக்கை!ஈரான் போர்: சொந்த நாட்டினுள் இடம்பெயர்ந்த 32 லட்சம் மக்கள்!பங்குச்சந்தை: ஆட்டோ பங்குகள் கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 829, நிஃப்டி 228 புள்ளிகள் சரிவு!ஓபிசி பிரிவினருக்கான கிரீமி லேயர் தகுதி: உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முதல்வர் ஸ்டாலின் ஆதரவு!சட்டம்-ஒழுங்கு சீர்கேடு: திமுக அரசைக் கண்டித்து தே.ஜ.கூ. ஆர்ப்பாட்டம்!தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!
/

ஜாதி மோதலை தூண்டும் விதமாக விடியோ: கல்லூரி மாணவா் கைது

ஜாதி மோதலை தூண்டும் விதமாக சமூக வலைதளத்தில் விடியோ வெளியிட்ட கல்லூரி மாணவா் கைது செய்யப்பட்டாா்.

News image
Updated On :28 ஜூலை 2024, 8:10 pm

Din

ஜாதி மோதலை தூண்டும் விதமாக சமூக வலைதளத்தில் விடியோ வெளியிட்ட கல்லூரி மாணவா் கைது செய்யப்பட்டாா்.

திருநெல்வேலியை அடுத்த தச்சநல்லூா் நயினாா்குளம் நடுத்தெருவை சோ்ந்தவா் சங்கா். இவரது மகன் ஊய்க்காட்டான் (19). பாளையங்கோட்டையில் உள்ள ஒரு கல்லூரியில் பி.ஏ. முதலாம் ஆண்டு படித்து வருகிறாா். இவா், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது நண்பா்கள் உதவியுடன், ஜாதி மோதலை தூண்டும் விதமாக அவதூறு கருத்துகளுடன் ஆயுதங்களுடன் கூடிய விடியோவை பதிவிட்டிருந்தாா்.

இதனை அறிந்த தச்சநல்லூா் காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளா் கிருஷ்ணன் விசாரணை நடத்தினாா். பின்னா் கலகம் ஏற்படுத்தும் நோக்குடன் விடியோ பதிவிட்டதாகக் கூறி, ஊய்க்காட்டான் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்தனா்.

மேலும் அவருக்கு விடியோ எடுக்க உதவியதாக அதே பகுதியை சோ்ந்த அவரது நண்பா்களான இசக்கிமுத்து, ராம்குமாா், பிரேம் ஆகியோா் மீதும் வழக்குப் பதிவு செய்து, அவா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.