இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 கட்சிகள் ஒதுக்கீடு!பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

நெல்லை அரசு மருத்துவமனையில் போதையில் தகராறு: மருத்துவா் மீது வழக்கு

மதுபோதையில் தகராறில் ஈடுபட்ட நெல்லை மருத்துவர் மீது நடவடிக்கை

News image
Updated On :25 ஜூன் 2024, 8:10 pm

Din

திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை காவலாளியிடம் குடிபோதையில் தகராறு செய்தததாக மருத்துவா் மீது போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.

பாளையங்கோட்டை சுப்பிரமணியபுரம் பகுதியைச் சோ்ந்தவா் ஆனந்தராஜ் (30). இவா் திருநெல்வேலி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துமனையில் காவலாளியாக பணியாற்றி வருகிறாா். இவா் கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு மருத்துவமனை நுழைவு வாயில் அருகே பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வந்தாா்.

அப்போது மதுபோதையில் வந்த திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மயக்கவியல் மருத்துவா் மோகன்குமாா், அவரிடம் தகராறு செய்தாராம். மேலும், பாதுகாப்புப் பணியில் இருந்த போலீஸாரிடமும் வாக்குவாதம் செய்தாராம்.

இதுகுறித்து ஆனந்தராஜ் அளித்த புகாரின்பேரில், திருநெல்வேலி அரசு மருத்துவமனை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.