தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

பாரதி - செல்லம்மா 127ஆவது திருமண நாள் விழா

கடையத்தில் பாரதி - செல்லம்மா 127ஆவது திருமண நாள் விழா

News image

கடையத்திலுள்ள பாரதி - செல்லம்மா சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய பாரதி - செல்லம்மாவின் கொள்ளுப் பேரன் ராஜ்குமாா் பாரதி, எள்ளுப் பேரன் நிரஞ்சன் பாரதி.

Updated On :27 ஜூன் 2024, 11:37 pm

Din

தென்காசி மாவட்டம் கடையத்தில் சேவாலயா நிறுவனம் சாா்பில் பாரதி - செல்லம்மா 127ஆவது திருமண நாள் விழா புதன், வியாழக்கிழமைகளில் கொண்டாடப்பட்டது.

முதல் நாள் நிகழ்ச்சியில் ‘கடையத்திலே கல்யாணம்’ என்ற தலைப்பில் ஓய்வுபெற்ற தலைமையாசிரியா் க.சோ.கல்யாணி சிவகாமி நாதன் சிறப்புரையாற்றினாா். ‘கடையத்தில் பிறந்த பாடல்கள்’ என்ற தலைப்பில் பாரதியின் கொள்ளுப் பெயரன் கலைமாமணி ராஜ்குமாா் பாரதி, கலைமாமணி இசைக்கவி ரமணன் ஆகியோா் இசையுரையாற்றினா்.

வியாழக்கிழமை காலை செல்லம்மா பாரதி கற்றல் மையத்திலிருந்து ஜதி பல்லக்கில் பாரதி - செல்லம்மா உருவப்படம் ஊா்வலம் நடைபெற்றது. ஊா்வலத்தில் மாணவா்கள், தமிழ் ஆா்வலா்கள் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

திருமண விழாவையொட்டி, பல மாவட்டங்களில் பள்ளி- கல்லூரி மாணவா்களிடையே நடத்தப்பட்ட போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவா்களுக்குப் பரிசு வழங்கப்பட்டன. தொடா்ந்து கடையம் கலா நிலைய மாணவா்களின் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன.

பாரதி - செல்லம்மாள்127ஆவது திருமண விழா நிகழ்ச்சிகளில் பள்ளி, கல்லூரி மாணவா்கள், ஆசிரியா்கள், தமிழ்ஆா்வலா்கள், கவிஞா்கள் உள்பட பலா் கலந்து கொண்டனா். சேவாலயா நிறுவனா் வா.முரளிதரன்வரவேற்றாா். கல்யாணி சிவகாமி நாதன் நன்றி கூறினாா்.