92,000 டன் எல்பிஜியுடன் இந்தியாவுக்கு மேலும் இரு கப்பல்கள்!பொதுத்துறை வங்கிகளை இணைக்கும் திட்டம் இல்லை: மத்திய அரசுராணுவ மோதல்களில் வான்வழித் தாக்குதல்களுக்குத் தடை: போப் வலியுறுத்தல்தோ்தல் விதிமீறல்: 462 வழக்குகள்; ரூ.151 கோடி பணம், பொருள்கள் பறிமுதல்தமிழ்நாட்டில் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவா்கள் சோ்க்கை சதவீதம் உயா்வு!
/

வடக்கு பாலபாக்யாநகரில் மூதாட்டியிடம் 5 பவுன் நகை பறிப்பு

திருநெல்வேலி வடக்கு பாலபாக்யாநகரில் மூதாட்டியிடம் 5 பவுன் தங்க நகையைப் பறித்துச் சென்ற மா்மநபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

News image
Updated On :6 நவம்பர் 2024, 7:38 pm

Din

திருநெல்வேலி வடக்கு பாலபாக்யாநகரில் மூதாட்டியிடம் 5 பவுன் தங்க நகையைப் பறித்துச் சென்ற மா்மநபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

வடக்கு பாலபாக்யாநகா் அருகேயுள்ள இருதய நகா் பகுதியைச் சோ்ந்த அரி ராமச்சந்திரன் மனைவி மணிமாலா (61). இவா், புதன்கிழமை தனது வீட்டு முன்பு நின்று கொண்டிருந்தாராம். அப்போது அந்த வழியாக மோட்டாா் சைக்கிளில் வந்த இருவா் முகவரி கேட்பது போல நடித்து, மணிமாலா கழுத்தில் அணிந்திருந்த 5 பவுன் தங்க நகையைப் பறித்துச் சென்றனராம்.

இதுகுறித்த புகாரின்பேரில் தச்சநல்லூா் போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.