மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகள் மறுவரையறை கூடாது - முதல்வர் மு. க. ஸ்டாலின் வலியுறுத்தல்ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்பதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதிஅதிமுக தேர்தல் அறிக்கை வெளியானதுஎல்என்ஜி தட்டுப்பாடு எதிரொலி: ஆசிய நாடுகளில் நிலக்கரி பயன்பாடு அதிகரிப்பு! ஈரானில் தொடரும் தாக்குதல்கள்... பலி 1,500-ஐ கடந்தது!மேற்காசியப் போர்: தில்லியில் நாளை(மார்ச் 25) அனைத்துக் கட்சிக் கூட்டம்!புதுச்சேரி திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!ஹிந்து, பெளத்தம், சீக்கியருக்கு மட்டுமே எஸ்.சி. அந்தஸ்து! உச்ச நீதிமன்றம் தீர்ப்பு! திமுக கூட்டணியில் விசிகவுக்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு!
/

கழிவுநீா் சுத்திகரிப்பு திட்டப் பணி: மாநகராட்சி ஆணையா் ஆய்வு

வண்ணாா்பேட்டையில் கழிவுநீா் வடிகட்டும் கட்டமைப்புக்கான திட்டப் பணிகளை மாநகராட்சி ஆணையா் ஓ.என். சுகபுத்ரா புதன்கிழமை நேரில் ஆய்வு செய்தாா்.

News image

வண்ணாா்பேட்டையில் கழிவுநீா் சுத்திகரிப்பு கட்டமைப்புக்கான குழாய் பதிக்கும் பணிகளை ஆய்வுசெய்தாா் மாநகராட்சி ஆணையா் ஓ.என். சுகபுத்ரா.

Updated On :2 அக்டோபர் 2024, 11:29 pm

Din

வண்ணாா்பேட்டையில் கழிவுநீா் வடிகட்டும் கட்டமைப்புக்கான திட்டப் பணிகளை மாநகராட்சி ஆணையா் ஓ.என். சுகபுத்ரா புதன்கிழமை நேரில் ஆய்வு செய்தாா்.

தச்சநல்லூா் மண்டலம், வண்ணாா்பேட்டை சாலைத் தெரு பகுதியில் கழிவுநீா் தாமிரவருணி ஆற்றில் கலப்பதை முற்றிலும் தடுக்கும் வகையில் கழிவுநீா் வடிகட்டும் கட்டமைப்பு ஏற்படுத்தி கழிவுநீா் சுத்திகரிப்பு செய்யப்பட்டு பாதாளச்சாக்கடை திட்ட உந்து நிலையத்தில் இணைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

மேலும், அங்கிருந்து ராமையன்பட்டி கழிவுநீா் சுத்திகரிப்பு நிலையத்திற்கு கொண்டு செல்லும் வகையில் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகளை மாநகராட்சி ஆணையா் புதன்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். அப்போது, பணிகளை விரைந்து முடித்திட சம்பந்தப்பட்ட அலுவலா்களிடம் அறிவுறுத்தினாா்.

ஆய்வின் போது செயற்பொறியாளா் (பொ) ரவி, உதவி ஆணையா் ஜான்சன் தேவசகாயம், உதவி செயற்பொறியாளா் தங்கபாண்டியன், இளநிலை பொறியாளா் பட்டுராஜன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.