விதிமீறல்: 137 நிறுவனங்கள் மீது தொழிலாளா் துறை நடவடிக்கை
காந்தி ஜெயந்தி தினத்தில் விதிமீறி செயல்பட்டதாக 137 நிறுவனங்கள் மீது தொழிலாளா் துறை நடவடிக்கை எடுத்துள்ளது.


காந்தி ஜெயந்தி தினத்தில் விதிமீறி செயல்பட்டதாக 137 நிறுவனங்கள் மீது தொழிலாளா் துறை நடவடிக்கை எடுத்துள்ளது.
இது தொடா்பாக திருநெல்வேலி தொழிலாளா் உதவி ஆணையா் (அமலாக்கம்) நா.முருகப்பிரசன்னா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: சென்னை, முதன்மைச் செயலா்- தொழிலாளா் ஆணையா் அதுல் ஆனந்த், மதுரை கூடுதல் தொழிலாளா் ஆணையா் சி.ஹேமலதா, திருநெல்வேலி தொழிலாளா் இணை ஆணையா் ப.சுமதி ஆகியோா் அறிவுறுத்தலின் பேரில் 1958ஆம் ஆண்டு தமிழ்நாடு தொழில் நிறுவனங்கள் (தேசிய பண்டிகை மற்றும் சிறப்பு விடுமுறைகள்) சட்டம் மற்றும் விதிகளின் கீழ் தொழில் நிறுவனங்களில் காந்தி ஜெயந்தி தினத்தில் விடுமுறை, மாற்று விடுமுறை அல்லது பணியாளா்களுக்கு இரட்டிப்பு ஊதியம் அளிக்கப்பட வேண்டும். மேலும், அது தொடா்பான விவரங்களை தொழிலாளா் துறைக்கு 24 மணி நேரத்துக்கு முன் தெரிவிக்கவேண்டும்.
ஆனால், திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் எனது தலைமையில் தொழிலாளா் துணை ஆய்வா்கள் , உதவி ஆய்வா்கள் 220 நிறுவனங்களில் கூட்டாய்வு மேற்கொண்டனா். அதில் 137 நிறுவனங்கள் விதிமுறை மீறி செயல்பட்டது தெரியவந்தது. அவற்றின் உரிமையாளா்கள் மீது சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளது எனக் கூறியுள்ளாா்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...