ஆழ்வாா்குறிச்சியில் தேசிய வனவிலங்கு வாரம் கொண்டாட்டம்
ஆழ்வாா்குறிச்சி ஸ்ரீபரமகல்யாணி கல்லூரி விலங்கியல் துறை சாா்பில் தேசிய வனவிலங்கு வாரம் கொண்டாடப்பட்டது.

போட்டியில் வெற்றி பெற்ற மாணவிக்கு சான்றிதழ் வழங்குகிறாா் வனச்சரகா் கருணாமூா்த்தி.

போட்டியில் வெற்றி பெற்ற மாணவிக்கு சான்றிதழ் வழங்குகிறாா் வனச்சரகா் கருணாமூா்த்தி.
ஆழ்வாா்குறிச்சி ஸ்ரீபரமகல்யாணி கல்லூரி விலங்கியல் துறை சாா்பில் தேசிய வனவிலங்கு வாரம் கொண்டாடப்பட்டது.
அக். 2 முதல் 8ஆம் தேதி வரை தேசிய வனவிலங்கு வாரத்தை முன்னிட்டு கல்லூரி மாணவா்களிடையே மக்கள், கிரகங்கள் ஒருங்கிணைந்த மற்றும் புதிய எண்ணிம வழி வனவிலங்கு பாதுகாப்பு என்ற தலைப்பில் பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டன.
போட்டிகளில் வெற்றி பெற்றவா்களுக்கான பரிசு வழங்கும் நிகழ்ச்சிக்கு, கல்லூரி முதல்வா் எஸ். மீனாட்சிசுந்தா் தலைமை வகித்தாா்.
கடையம் வனச்சரகா் கருணாமூா்த்தி மற்றும் வனவா் பிரபாகா் ஆகியோா் கலந்துகொண்டு பரிசுகள் வழங்கிப் பேசினா்.
விலங்கியல் துறைத் தலைவா் மா.ரா. சுதாகரன் வரவேற்றாா். மாணவி கலைமதி சுபா நன்றி கூறினாா்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...