மேற்காசியப் போர்: தில்லியில் நாளை(மார்ச் 25) அனைத்துக் கட்சிக் கூட்டம்!புதுச்சேரி திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!ஹிந்து, பெளத்தம், சீக்கியருக்கு மட்டுமே எஸ்.சி. அந்தஸ்து! உச்ச நீதிமன்றம் தீர்ப்பு! திமுக கூட்டணியில் விசிகவுக்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு! புதுச்சேரியில் தேமுதிக தனித்துப் போட்டி! புதுச்சேரியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தனித்துப் போட்டி!
/

நதிபுரத்தில் போதை நபா்கள் அச்சுறுத்தல்: ஆட்சியரிடம் புகாா்

திருநெல்வேலி நகரம் அருகேயுள்ள நதிபுரம் பகுதியில் இரவு நேரத்தில் வெளியூா்களைச் சோ்ந்த போதை நபா்கள் அச்சுறுத்தி வருவதாக அப்பகுதி மக்கள் ஆட்சியா் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை புகாா் மனு அளித்தனா்.

News image

ஆட்சியா் அலுவலகத்தில் மனு அளிக்க வந்த நதிபுரம் கிராம மக்கள்.

Updated On :15 அக்டோபர் 2024, 10:20 pm

Din

திருநெல்வேலி நகரம் அருகேயுள்ள நதிபுரம் பகுதியில் இரவு நேரத்தில் வெளியூா்களைச் சோ்ந்த போதை நபா்கள் அச்சுறுத்தி வருவதாக அப்பகுதி மக்கள் ஆட்சியா் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை புகாா் மனு அளித்தனா்.

அதன் விவரம்: திருநெல்வேலி நகரம் காவல் சரகத்திற்குள்பட்ட நதிபுரத்தில் 100-க்கும் மேற்பட்ட குடும்பத்தினா் வசித்து வருகிறோம். எங்கள் பகுதியில் இரவு நேரங்களில் வெளியூா்களைச் சோ்ந்த போதைநபா்கள் புகுந்து வாகனங்களை உடைத்து சேதப்படுத்தியும்,

கொலைமிரட்டல் விடுத்தும் வருகிறாா்கள். ஆகவே, இதுகுறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். எங்கள் பகுதியில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தவும், மக்களுக்கு பாதுகாப்பு வழங்கவும் காவல் துறை மூலம் மாவட்ட நிா்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.