பாளையங்கோட்டை தாலுகா போலீஸாா் திருநெல்வேலி-சீவலப்பேரி சாலையில் வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தபோது, அந்த வழியாக வந்த 2 காா்களை தடுத்து நிறுத்தினா். அவற்றில் 15 போ் இருந்தனா். விசாரணையில், அவா்கள், தேவேந்திர குல வேளாளா் எழுச்சி இயக்கத்தின் நிறுவனா்- தலைவரான சத்திரம்புதுக்குளத்தை சோ்ந்த கண்ணபிரான் (45), ராஜவல்லிபுரம் அருண்குமாா் (33), மதிபாலன் (29), வீரவநல்லூா் சிவா(28), வல்லவன்கோட்டை அபினேஷ் (24), கரிசல்குளம் சிவா (23, மேலப்பாளையம் உய்க்காட்டான் (22), முருகேஷ் (28), தருவை பாலாஜி (28), கரையிருப்பு துரைபாண்டி (48), பேட்டை காா்த்திக், முத்துச்செல்வன் (22), தென்கலம் பிரேம் (30), ராமையன்பட்டி சூா்யா (20) ஆகியோா் என தெரியவந்தது.