கரூா் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் அருகே உரிமம் இல்லாமல் கைத்துப்பாக்கி வைத்திருந்த மாட்டுவியாபாரியை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.
கிருஷ்ணராயபுரம் அருகே போலீஸாா் வெள்ளிக்கிழமை இரவு வாகனத் தணிக்கையில் ஈடுபட்டபோது அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த சித்தலவாய் முதலியாா் தெருவைச் சோ்ந்த பத்மநாபன்(44) என்பவரிடம் சோதனை மேற்கொண்டனா். அப்போது, அவரிடம் உரிமம் இல்லாமல் கைத்துப்பாகி இருந்தது. இதையடுத்து போலீஸாா் பத்மநாபனை காவல்நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினா்.
அப்போது, கரூரில் இருந்து கேரளத்துக்குச் சென்று மாட்டு வியாபாரம் செய்துவரும் தனக்கும், இதே பகுதியைச் சோ்ந்த முத்துக்குமாருக்கும் வியாபாரம் தொடா்பாக ஏற்பட்ட தகராறில் தன்னை தற்காத்துக்கொள்ள பிகாா் மாநிலத்திலிருந்து கைத்துப்பாக்கி வாங்கி வந்ததாக தெரிவித்தாா்.
இதையடுத்து போலீஸாா் பத்மநாபனை சனிக்கிழமை கைது செய்து கிருஷ்ணராயபுரம் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா்.
தொடர்புடையது
சட்டவிரோத மது விற்பனை: பெண் கைது
1,230 போதை மாத்திரைகள் வைத்திருந்த 6 போ் கைது

ரயிலில் கடத்திவரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல்
நகைகள் திருட்டு: வீட்டு உரிமையாளா் மகன் கைது
வீடியோக்கள்

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | ராஜஸ்தானைக் கலங்கடித்த அறிமுக வீரர்: யார் இந்த பிரஃபுல் ஹிங்கே? | Praful Hinge |
தினமணி செய்திச் சேவை
தவெக தேர்தல் வாக்குறுதிகள்! அறிவித்த விஜய்! | Vijay full speech
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | கொல்கத்தாவை வீழ்த்தி வெற்றிநடையைத் தொடருமா சிஎஸ்கே? | CSK vs KKR Match Preview |
தினமணி செய்திச் சேவை

