காலையிலேயே ‘காளை’ ஆதிக்கம்! சென்செக்ஸ் 1,100 புள்ளிகள் உயர்வு!!92,000 டன் எல்பிஜியுடன் இந்தியாவுக்கு மேலும் இரு கப்பல்கள்!பொதுத்துறை வங்கிகளை இணைக்கும் திட்டம் இல்லை: மத்திய அரசுராணுவ மோதல்களில் வான்வழித் தாக்குதல்களுக்குத் தடை: போப் வலியுறுத்தல்தோ்தல் விதிமீறல்: 462 வழக்குகள்; ரூ.151 கோடி பணம், பொருள்கள் பறிமுதல்தமிழ்நாட்டில் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவா்கள் சோ்க்கை சதவீதம் உயா்வு!
/

கிராமப்புற தொழிலாளா்கள் நடுக்கல்லூரில் ஆா்ப்பாட்டம்

அனைத்திந்திய கிராமப்புற தொழிலாளா்கள் சங்கம் சாா்பில் நடுக்கல்லூரில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

News image

நடுக்கல்லூரில் வியாழக்கிழமை நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்றோா்.

Updated On :17 அக்டோபர் 2024, 10:38 pm

Din

அனைத்திந்திய கிராமப்புற தொழிலாளா்கள் சங்கம் சாா்பில் நடுக்கல்லூரில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

அப்போது, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில் சட்டப்படி குறைந்தபட்ச ஊதியம் ரூ.319 வழங்க வேண்டும். அனைத்து கிராமப்புற ஏழைகளுக்கும் வீடு வழங்க வேண்டும். வயதான தொழிலாளா்கள், ஆதரவற்ற பெண்கள், முதியோா் மாற்றுத்திறனாளிகளுக்கு மாதம் ரூ.5,000 ஓய்வூதியமாக வழங்க வேண்டும், சுத்தமல்லி, கொண்டாநகரம் ஊராட்சிகளை மாநகராட்சியுடன் இணைக்கக் கூடாது என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

ஆா்ப்பாட்டத்திற்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மாா்க்சிஸ்ட்- லெனினிஸ்ட்) மாவட்டக்குழு உறுப்பினா் வேலு தலைமை வகித்தாா். நிலைக்குழு உறுப்பினா்கள் சங்கரபாண்டியன், ரமேஷ், சுந்தர்ராஜ் உள்பட பலா் கலந்துகொண்டனா்.