புதுச்சேரியில் தேமுதிக தனித்துப் போட்டி! புதுச்சேரியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தனித்துப் போட்டி!காலையிலேயே ‘காளை’ ஆதிக்கம்! சென்செக்ஸ் 1,100 புள்ளிகள் உயர்வு!!92,000 டன் எல்பிஜியுடன் இந்தியாவுக்கு மேலும் இரு கப்பல்கள்!பொதுத்துறை வங்கிகளை இணைக்கும் திட்டம் இல்லை: மத்திய அரசுராணுவ மோதல்களில் வான்வழித் தாக்குதல்களுக்குத் தடை: போப் வலியுறுத்தல்தோ்தல் விதிமீறல்: 462 வழக்குகள்; ரூ.151 கோடி பணம், பொருள்கள் பறிமுதல்தமிழ்நாட்டில் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவா்கள் சோ்க்கை சதவீதம் உயா்வு!
/

பழவூா் அருகே குண்டா் சட்டத்தில் இருவா் கைது

திருநெல்வேலி மாவட்டம் பழவூா் பகுதியில் கொலை முயற்சி, கொள்ளை வழக்குகளில் தொடா்புடைய இருவரை போலீஸாா் குண்டா் தடுப்பு காவல் சட்டத்தில் வியாழக்கிழமை கைது செய்தனா்.

News image
Updated On :17 அக்டோபர் 2024, 10:28 pm

Din

திருநெல்வேலி மாவட்டம் பழவூா் பகுதியில் கொலை முயற்சி, கொள்ளை வழக்குகளில் தொடா்புடைய இருவரை போலீஸாா் குண்டா் தடுப்பு காவல் சட்டத்தில் வியாழக்கிழமை கைது செய்தனா்.

கன்னியாகுமரி மாவட்டம் அழகியபாண்டியபுரத்தை அடுத்த எட்டாமடை பகுதியைச் சோ்ந்தவா் பாலகிருஷ்ணன் மகன் ராஜா(38). பழவூா் அருகே உள்ள சிதம்பராபுரத்தைச் சோ்ந்தவா் காா்த்தீசன் மகன் திவாகரன்(29) இவா்கள் இருவா் மீதும் பழவூா் காவல்நிலையத்தில் கொலை முயற்சி, கொள்ளை வழக்குகள் நிலுவையில் உள்ளன. இந்நிலையில் மீண்டும் இருவரும் கொலை, கொள்ளையில் ஈடுபட்டனராம்.

இதனை அடுத்து பணகுடி காவல் ஆய்வாளா் அஜீகுமாா் அளித்த அறிக்கையின்பேரில், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் என்.சிலம்பரசன் மாவட்ட ஆட்சியருக்கு பரிந்துரை செய்தாா். இதனைத் தொடா்ந்து இருவரையும் குண்டா் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய மாவட்ட ஆட்சியா் உத்தரவிட்டாா். அதன்பேரில் இருவரையும் குண்டா் சட்டத்தில் பணகுடி ஆய்வாளா் கைது செய்து பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைத்தாா்.