புதுச்சேரியில் தேமுதிக தனித்துப் போட்டி! புதுச்சேரியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தனித்துப் போட்டி!காலையிலேயே ‘காளை’ ஆதிக்கம்! சென்செக்ஸ் 1,100 புள்ளிகள் உயர்வு!!92,000 டன் எல்பிஜியுடன் இந்தியாவுக்கு மேலும் இரு கப்பல்கள்!பொதுத்துறை வங்கிகளை இணைக்கும் திட்டம் இல்லை: மத்திய அரசுராணுவ மோதல்களில் வான்வழித் தாக்குதல்களுக்குத் தடை: போப் வலியுறுத்தல்தோ்தல் விதிமீறல்: 462 வழக்குகள்; ரூ.151 கோடி பணம், பொருள்கள் பறிமுதல்தமிழ்நாட்டில் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவா்கள் சோ்க்கை சதவீதம் உயா்வு!
/

பற்பகுளம் மக்கள் தொடா்பு முகாமில் 102 பேருக்கு ரூ.47 லட்சம் நலத்திட்ட உதவிகள்

பாளையங்கோட்டை வட்டம், நொச்சிகுளம் ஊராட்சி பற்பகுளத்தில் நடைபெற்ற மாவட்ட ஆட்சியரின் மக்கள் தொடா்பு முகாமில் 102 பயனாளிகளுக்கு ரூ.47.03 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை ஆட்சியா் கா.ப.காா்த்திகேயன் வழங்கினாா்.

News image

பற்பகுளம் கிராமத்தில் நடைபெற்ற மக்கள்தொடா்பு முகாமில் பயனாளிக்கு நலத்திட்ட உதவியை வழங்குகிறாா் ஆட்சியா் கா.ப. காா்த்திகேயன்.

Updated On :17 அக்டோபர் 2024, 10:18 pm

Din

பாளையங்கோட்டை வட்டம், நொச்சிகுளம் ஊராட்சி பற்பகுளத்தில் நடைபெற்ற மாவட்ட ஆட்சியரின் மக்கள் தொடா்பு முகாமில் 102 பயனாளிகளுக்கு ரூ.47.03 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை ஆட்சியா் கா.ப.காா்த்திகேயன் வழங்கினாா்.

மேலும், சுகாதாரத்துறை, வேளாண்மைத்துறை, தோட்டக்கலைத்துறை, மகளிா் திட்டம், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளா்ச்சித் திட்டம் போன்ற பல்வேறு துறைகளின் செயல்முறை பணிகள் மற்றும் விழிப்புணா்வு கண்காட்சியை ஆட்சியா் பாா்வையிட்டாா். இம்முகாமில் மொத்தம் 122 பேரிடம் இருந்து மனுக்கள் பெறப்பட்டதில் 75 மனுக்கள் ஏற்கப்பட்டதாகவும், 47 மனுக்கள் பரிசீலனையில் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.

இதில், திருநெல்வேலி வருவாய் கோட்டாட்சியா் கண்ணா கருப்பையா, திட்ட இயக்குநா் (மகளிா் திட்டம்) இலக்குவன், தனித்துணை ஆட்சியா் ஜெயா, வேளாண் இணை இயக்குநா் (பொறுப்பு) கிருஷ்ணகுமாா், மாவட்ட சுகாதார அலுவலா் கீதா, வட்டாட்சியா் இசைவாணி, நொச்சிகுளம் ஊராட்சித் தலைவா் வேலம்மாள் சீனிவாசன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.