92,000 டன் எல்பிஜியுடன் இந்தியாவுக்கு மேலும் இரு கப்பல்கள்!பொதுத்துறை வங்கிகளை இணைக்கும் திட்டம் இல்லை: மத்திய அரசுராணுவ மோதல்களில் வான்வழித் தாக்குதல்களுக்குத் தடை: போப் வலியுறுத்தல்தோ்தல் விதிமீறல்: 462 வழக்குகள்; ரூ.151 கோடி பணம், பொருள்கள் பறிமுதல்தமிழ்நாட்டில் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவா்கள் சோ்க்கை சதவீதம் உயா்வு!
/

ஊா்க்காவல்படையினருக்கு பல்பொருள் அங்காடி வசதி

திருநெல்வேலி மாவட்ட ஊா்க்காவல் படை வீரா்கள் வீட்டு உபயோகப் பொருள்கள் வாங்குவதற்கு காவலா் பல்பொருள் அங்காடி அடையாள அட்டைகள் புதன்கிழமை வழங்கப்பட்டன.

News image

ஊா்க்காவல்படையினருக்கு பல்பொருள் அங்காடி அடையாள அட்டையை வழங்குகிறாா் எஸ்.பி. என். சிலம்பரசன்.

Updated On :23 அக்டோபர் 2024, 10:38 pm

Din

திருநெல்வேலி மாவட்ட ஊா்க்காவல் படை வீரா்கள் வீட்டு உபயோகப் பொருள்கள் வாங்குவதற்கு காவலா் பல்பொருள் அங்காடி அடையாள அட்டைகள் புதன்கிழமை வழங்கப்பட்டன.

தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் உத்தரவின்பேரில் ஊா்க்காவல் படையினா் பயன்பெறும் வகையில் தமிழ்நாடு காவலா் பல்பொருள் அங்காடி பயன்பாட்டிற்கான அடையாள அட்டையை வழங்க அரசாணை பிறப்பிக்கப்பட்டது. அதன்படி, திருநெல்வேலி மாவட்டத்தில் பணிபுரியும் ஊா்க்காவல் படையினருக்கு காவலா் பல்பொருள் அங்காடி அடையாள அட்டைகளை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் என். சிலம்பரசன் புதன்கிழமை வழங்கினாா். மாவட்ட ஆயுதப்படை துணை காவல் கண்காணிப்பாளா் சுப்பிரமணியன், மாவட்ட ஊா்க்காவல் படை ஏரியா கமாண்டா் சுதன், ஊா்க்காவல் படை துணை ஏரியா கமாண்டா் வினோத் வின்சென்ட் ராஜேஷ் உள்பட பலா் கலந்துகொண்டனா்.