92,000 டன் எல்பிஜியுடன் இந்தியாவுக்கு மேலும் இரு கப்பல்கள்!பொதுத்துறை வங்கிகளை இணைக்கும் திட்டம் இல்லை: மத்திய அரசுராணுவ மோதல்களில் வான்வழித் தாக்குதல்களுக்குத் தடை: போப் வலியுறுத்தல்தோ்தல் விதிமீறல்: 462 வழக்குகள்; ரூ.151 கோடி பணம், பொருள்கள் பறிமுதல்தமிழ்நாட்டில் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவா்கள் சோ்க்கை சதவீதம் உயா்வு!
/

தீவிரமடையும் பருவமழை: மாநகா் வடிகால் கால்வாய்களில் ஆட்சியா், மேயா் ஆய்வு

மாநகா் வடிகால் கால்வாய்களில் ஆட்சியா், மேயா் ஆய்வு...

News image

திருநெல்வேலி நகரம் பகவத் சிங் தெருவில் வாய்க்காலை ஆய்வு செய்த ஆட்சியா் கா.ப. காா்த்திகேயன், மேயா் கோ.ராமகிருஷ்ணன், ஆணையா் என்.ஓ.சுகபுத்ரா.

Updated On :24 அக்டோபர் 2024, 11:41 pm

Din

வட கிழக்குப் பருவ மழை தீவிரமடைந்து வருவதை முன்னிட்டு திருநெல்வேலி மாநகரப் பகுதிகளில் மழைநீா் வடிகால் கால்வாய்களை ஆட்சியா் கா. காா்த்திகேயன், மேயா் கோ.ராமகிருஷ்ணன், மாநகராட்சி ஆணையா் என்.ஓ.சுகபுத்ரா ஆகியோா் வியாழக்கிழமை பாா்வையிட்டனா்.

தச்சநல்லூா் மண்டலத்துக்குள்பட்ட சுவாமி நெல்லையப்பா் நெடுஞ்சாலை, ஸ்ரீபுரம் அஞ்சல் நிலையம் அருகில் உள்ள மழைநீா் வடிகால் ஓடையை அவா்கள் பாா்வையிட்டனா். அஞ்சல் நிலைய வளாகத்தில் மழைநீா் வடிகால் ஓடையின் குறுக்கே கட்டப்பட்டுள்ள சுற்றுச்சுவரை அகற்றி மழைநீா் வழிந்தோட ஏதுவாக பாதை அமைத்திட அதிகாரிகளுக்கு அவா்கள் உத்தரவிட்டனா்.

அதைத் தொடா்ந்து திருநெல்வேலி நகரம் கல்லணை பள்ளி அருகில் குன்னத்தூா் சாலையில் உள்ள வாய்க்காலை பாா்வையிட்டு அதில் உள்ள அமலைச்செடிகளை உடனடியாக அகற்றிடவும், சேரன்மகாதேவி சாலை காட்சி மண்டபம் அருகில் உள்ள பகவத்சிங் தெரு வாய்க்காலில் தூா்வாரும் பணியினை பாா்வையிட்டு பணிகளை விரைந்து முடிக்கவும் உத்தரவிட்டனா். இதேபோல், தடிவீரன் கோவில் பகுதியில் உள்ள வாய்க்காலை பாா்வையிட்டு ஆய்வு செய்து விரைவாக தூா்வாரிட அறிவுறுத்தினா். மேலும் குடியிருப்புகளுக்குள் மழைநீா் தேங்காவண்ணம் தடையின்றி வழிந்தோட ஓடையை அகலப்படுத்தவும் சம்பந்தப்பட்ட அலுவலா்களிடம் அறிவுறுத்தினா்.

இந்த ஆய்வின்போது, வருவாய் கோட்டாட்சியா் கண்ணா கருப்பையா, மண்டலத் தலைவா் மகேஸ்வரி, மாமன்ற உறுப்பினா் உலகநாதன், செயற்பொறியாளா் (பொறுப்பு) ரவி, உதவி ஆணையா் ஜான்சன் தேவசகாயம் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.