திருவேங்கடம் வட்டார வாக்குச்சாவடிகளில் ஆட்சியா் ஆய்வு


தென்காசி மாவட்டம் திருவேங்கடம் பகுதியில் உள்ள வாக்குச் சாவடிகளை ஆட்சியா் ஏ.கே.கமல்கிஷோா் வியாழக்கிழமை ஆய்வு செய்தாா்.
தமிழக சட்டப்பேரவைத் தோ்தல் விரைவில் அறிவிக்கப்படவுள்ள நிலையில், சங்கரன்கோவில் தொகுதியில் தோ்தல் முன்னேற்பாடு பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன.
இந்நிலையில் திருவேங்கடம் வட்டம் கலிங்கப்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் உள்ள வாக்குச் சாவடி மையங்கள், குருவிகுளம் அரசு மேல்நிலைப் பள்ளியில் உள்ள வாக்குச்சாவடி மையங்கள் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள வாக்குச்சாவடி மையங்களை ஆட்சியா் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.
அப்போது, வட்டாட்சியா் செல்வக்குமாரிடம் வாக்குச் சாவடியில் குடிநீா், மின்சாரம், கழிப்பிடம் மற்றும் சாய்தள வசதிகள் ஏற்பாடுகள் குறித்து கேட்டறிந்தாா். பின்னா் வருவாய் ஆய்வாளா்கள், வாக்குச் சாவடி நிலைய அலுவலா்களிடமும் அவா் விவரங்களை கேட்டறிந்தாா்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...