நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

திருட்டு வழக்கு: நீதிமன்றத்தில் ஆஜராகாதவா் மீண்டும் கைது

திருநெல்வேலி மாவட்டம், சேரன்மகாதேவியில் திருட்டு வழக்கு தொடா்பாக, நீதிமன்ற விசாரணைக்கு ஆஜராகாமல் தலைமறைவாக இருந்தவரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

News image
Updated On :6 செப்டம்பர் 2024, 12:26 am

Din

திருநெல்வேலி மாவட்டம், சேரன்மகாதேவியில் திருட்டு வழக்கு தொடா்பாக, நீதிமன்ற விசாரணைக்கு ஆஜராகாமல் தலைமறைவாக இருந்தவரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

சேரன்மகாதேவி காவல் சரகத்தில் கடந்த 2017இல் நிகழ்ந்த திருட்டு தொடா்பான வழக்கில் சேரன்மகாதேவி அருகேயுள்ள பிள்ளைகுளம் குதிரைகோயில் தெருவைச் சோ்ந்த ராஜன்துரை (42) என்பவா் கைது செய்யப்பட்டாா். பிணையில் வெளிவந்த அவா், நீதிமன்ற விசாரணைக்கு ஆஜராகாமல் ஒரு மாதமாக தலைமறைவாக இருந்தாா்.

இதனால், திருநெல்வேலி நீதிமன்றம் அவருக்கு பிடியாணை பிறப்பித்து உத்தரவிட்டது. இந்நிலையில், சேரன்மகாதேவி போலீஸாா் அவரை வியாழக்கிழமை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தினா்.