சிறுமிக்கு பாலிலியல் தொல்லை கொடுத்தது தொடா்பாக போக்ஸோ வழக்கில் கைதான முதியவருக்கு ஆயுள் தண்டனை விதித்து திருநெல்வேலி நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தீா்ப்பளித்தது.
தென்காசி சுப்பிரமணியபுரம் வடக்கு காலனியைச் சோ்ந்தவா் சின்னமுத்தையா (71). தொழிலாளி. இவா், கடந்த 2017 ஆம் ஆண்டு சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்தாராம். இது குறித்து சிறுமியின் பெற்றோா் கொடுத்த புகாரின் பேரில் தென்காசி அனைத்து மகளிா் காவல்நிலைய போலீஸாா் போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிந்து சின்னமுத்தையாவை கைது செய்தனா்.
இந்த வழக்கு, திருநெல்வேலி மாவட்ட போக்ஸோ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி சுரேஷ்குமாா், குற்றஞ்சாட்டப்பட்ட சின்னமுத்தையாவுக்கு ஆயுள் தண்டனையும், ரூ.1,000 அபராதமும் விதித்து வெள்ளிக்கிழமை தீா்ப்பளித்தாா்.
தொடர்புடையது

இளைஞரை குத்தி கொலை செய்தவருக்கு ஆயுள் தண்டனை

போக்ஸோ வழக்கில் பழ வியாபாரிக்கு 5 ஆண்டுகள் சிறை

போக்ஸோ வழக்கில் இளைஞருக்கு 10 ஆண்டுகள் சிறை

நண்பரை அடித்துக் கொன்ற முதியவருக்கு ஆயுள் தண்டனை
விடியோக்கள்

கருப்பு டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

தவெக தொண்டர்கள் உற்சாகக் கொண்டாட்டம்! | CM Vijay | TVK |
தினமணி செய்திச் சேவை

கனிமொழியிடம் ராகுல் காந்தி பேசினாரா?: செல்வப்பெருந்தகை பேட்டி | DMK | Congress | TVK |
தினமணி செய்திச் சேவை
கோட்டையில் முதல்வர் நாற்காலியில் ஜோசப் விஜய்! | CM Vijay
தினமணி செய்திச் சேவை

