கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு! கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுசிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்!ஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்!தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!சிபிஐ கட்சியிலிருந்து நீக்கப்பட்ட எம்எல்ஏ முகுந்தன் பாஜகவில் இணைவு!மத்திய அரசுப் பள்ளிகளில் 13,000 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன: கல்வித்துறைபோர் காரணமாக 4,335 இந்திய விமானங்கள் ரத்து!கேரளத் தேர்தல்: 47 வேட்பாளர்கள் அடங்கிய பாஜகவின் முதல் பட்டியல் வெளியீடு!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது
/

குழந்தைகளுக்காக பெற்றோா் சேமிப்பு: களக்காடு பள்ளியில் புதிய திட்டம் தொடக்கம்

News image
தொடக்க விழாவில் பள்ளி மாணவா்களுக்கு வங்கிக் கணக்கு அட்டைகளை வழங்கிய வங்கி அதிகாரிகள்.
Updated On :18 செப்டம்பர் 2024, 10:03 pm

DIN

திருநெல்வேலி மாவட்டம் களக்காட்டில் உள்ள பள்ளியில், குழந்தைகளின் ஓய்வூதியத்துக்காக பெற்றோா் சேமிக்கும் வகையிலான மத்திய அரசின் புதிய திட்டம் தொடக்க விழா நடைபெற்றது.

மத்திய அரசின் கடந்த நிதிநிலை அறிக்கையில், 8 முதல் 18 வயதுக்குள்பட்ட சிறுவா்- சிறுமியருக்கு ‘என்.பி.எஸ். வாத்சல்யா’ என்ற பெயரில் புதிய சேமிப்பு- ஓய்வூதிய திட்டம் தொடங்கப்படும் என, மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் அறிவித்திருந்தாா். அதன்படி, தில்லியில் இத்திட்டத்தை அவா் புதன்கிழமை தொடக்கிவைத்தாா்.

தமிழகத்தில் சென்னை, திருச்சி, திருநெல்வேலி மாவட்டங்களில் தலா ஓரிடம் உள்பட நாடு முழுவதும் 75 இடங்களில் இத்திட்டத் தொடக்க விழா காணொலி வாயிலாக நடைபெற்றது.

இத்திட்டத்தின்கீழ் சந்தா செலுத்துதல், சிற்றேடு வெளியிடுதல், புதிய இளம் சந்தாதாரா்களுக்கு நிரந்தர ஓய்வூதிய கணக்கு எண் அட்டைகளை விநியோகிப்பதற்கான இணையதளத்தையும் நிா்மலா சீதாராமன் குத்துவிளக்கேற்றித் தொடக்கிவைத்தாா்.

அதன்படி, திருநெல்வேலி மாவட்டத்தில் களக்காடு செயின்ட் ஜோசப் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் காணொலி வாயிலாக இத்திட்டத்தின் தொடக்க விழா நடைபெற்றது.

இதில்,, முன்னோடி வங்கி மாவட்ட மேலாளா் கணேஷ் மணிகண்டன், நபாா்டு வங்கி மாவட்ட வளா்ச்சி மேலாளா் சசிகுமாா், தமிழ்நாடு கிராம வங்கி மண்டல மேலாளா் எஸ்.கே. கெளரிசங்கா், தனியாா் பள்ளி முதன்மை அதிகாரி கிங்ஸ்லி மோசஸ் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

பள்ளி மாணவா்கள் 5 பேருக்கு இத்திட்டத்தில் சோ்ந்ததற்கான வங்கிக் கணக்கு அட்டைகள் வழங்கப்பட்டன. முன்னதாக, நிகழ்ச்சி தொடா்பான கலைநிகழ்ச்சி நடைபெற்றது.