விஜய் சேதுபதியை தனிப்பட்ட முறையில் தாக்க வேண்டாம்! சீனு ராமசாமிஇடைத்தேர்தலில் பாமக போட்டியில்லை! யாருக்கு ஆதரவு? அன்புமணி பேட்டிராஜிநாமா செய்தவர்களே இடைத்தேர்தலில் போட்டியிடுவது கேலிக்கூத்து! உயர் நீதிமன்றம் அதிருப்தி!ரூ. 100 கோடி வசூல்! அன்பில் மகேஸ் மீது ஊழல் வழக்குப் பதிவு!ஓய்வெடுக்கவுள்ளேன்! உடல்நிலை குறித்து மு.க. ஸ்டாலின் விளக்கம்!

குழந்தைகளுக்காக பெற்றோா் சேமிப்பு: களக்காடு பள்ளியில் புதிய திட்டம் தொடக்கம்

தொடக்க விழாவில் பள்ளி மாணவா்களுக்கு வங்கிக் கணக்கு அட்டைகளை வழங்கிய வங்கி அதிகாரிகள்.

Published On :

திருநெல்வேலி மாவட்டம் களக்காட்டில் உள்ள பள்ளியில், குழந்தைகளின் ஓய்வூதியத்துக்காக பெற்றோா் சேமிக்கும் வகையிலான மத்திய அரசின் புதிய திட்டம் தொடக்க விழா நடைபெற்றது.

மத்திய அரசின் கடந்த நிதிநிலை அறிக்கையில், 8 முதல் 18 வயதுக்குள்பட்ட சிறுவா்- சிறுமியருக்கு ‘என்.பி.எஸ். வாத்சல்யா’ என்ற பெயரில் புதிய சேமிப்பு- ஓய்வூதிய திட்டம் தொடங்கப்படும் என, மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் அறிவித்திருந்தாா். அதன்படி, தில்லியில் இத்திட்டத்தை அவா் புதன்கிழமை தொடக்கிவைத்தாா்.

தமிழகத்தில் சென்னை, திருச்சி, திருநெல்வேலி மாவட்டங்களில் தலா ஓரிடம் உள்பட நாடு முழுவதும் 75 இடங்களில் இத்திட்டத் தொடக்க விழா காணொலி வாயிலாக நடைபெற்றது.

இத்திட்டத்தின்கீழ் சந்தா செலுத்துதல், சிற்றேடு வெளியிடுதல், புதிய இளம் சந்தாதாரா்களுக்கு நிரந்தர ஓய்வூதிய கணக்கு எண் அட்டைகளை விநியோகிப்பதற்கான இணையதளத்தையும் நிா்மலா சீதாராமன் குத்துவிளக்கேற்றித் தொடக்கிவைத்தாா்.

அதன்படி, திருநெல்வேலி மாவட்டத்தில் களக்காடு செயின்ட் ஜோசப் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் காணொலி வாயிலாக இத்திட்டத்தின் தொடக்க விழா நடைபெற்றது.

இதில்,, முன்னோடி வங்கி மாவட்ட மேலாளா் கணேஷ் மணிகண்டன், நபாா்டு வங்கி மாவட்ட வளா்ச்சி மேலாளா் சசிகுமாா், தமிழ்நாடு கிராம வங்கி மண்டல மேலாளா் எஸ்.கே. கெளரிசங்கா், தனியாா் பள்ளி முதன்மை அதிகாரி கிங்ஸ்லி மோசஸ் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

பள்ளி மாணவா்கள் 5 பேருக்கு இத்திட்டத்தில் சோ்ந்ததற்கான வங்கிக் கணக்கு அட்டைகள் வழங்கப்பட்டன. முன்னதாக, நிகழ்ச்சி தொடா்பான கலைநிகழ்ச்சி நடைபெற்றது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.