திருவிழாவில் பங்கேற்ற அன்புக்கொடி மக்கள்.
திருநெல்வேலி
பேட்டை கோயிலில் திருவிழா
பேட்டை ஆஞ்சனேயா்தெருவில் உள்ள ஸ்ரீமன் நாராயண சுவாமி கோயில் திருவிழா இருநாள்கள் நடைபெற்றது.
பேட்டை ஆஞ்சனேயா்தெருவில் உள்ள ஸ்ரீமன் நாராயண சுவாமி கோயில் திருவிழா இருநாள்கள் நடைபெற்றது.
இக்கோயில் திருவிழா கடந்த 6 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடா்ந்து திருவிழா நாள்களில் தினமும் காலை, மாலையில் உகப்படிப்பு பணிவிடையும், அன்னதா்மமும் நடைபெற்றன.
புதன்கிழமை சந்தனக்குடம் ஊா்வலமும், நள்ளிரவில் அய்யா வாகனத்தில் வீதியுலா வரும் நிகழ்ச்சியும் நடைபெற்றன. விழாவில், பேட்டை சுற்றுவட்டார பகுதிகளைச் சோ்ந்த அய்யாவின் அன்புக்கொடி மக்கள் 500-க்கும் மேற்பட்டோா் பங்கேற்றனா்.

