டி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!மாநிலங்களவை அதிமுக வேட்பாளராக தம்பிதுரை அறிவிப்பு - பாமகவுக்கு ஒரு இடம்!முஸ்லிம்கள் கொல்லப்படுவதில் மேற்கு வங்கம் முதலிடம் - பாஜக குற்றச்சாட்டு! திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் - மாநிலங்களவை திமுக வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகை
/

விருத்தகிரீஸ்வரா் கோயில் மாசி மக தெப்பத் திருவிழா

விருத்தாசலம் ஸ்ரீவிருத்தாம்பிகை, பாலாம்பிகை உடனுறை விருத்தகிரீஸ்வரா் கோயில் மாசி மக தெப்பத் திருவிழா செவ்வாய்க்கிழமை இரவு நடைபெற்றது.

News image
தெப்பத் திருவிழாவில் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்த வள்ளி, தெய்வானை சமேத சுப்ரமணியா்.
Updated On :4 மார்ச் 2026, 6:34 pm

தினமணி செய்திச் சேவை

கடலூா் மாவட்டம், விருத்தாசலம் ஸ்ரீவிருத்தாம்பிகை, பாலாம்பிகை உடனுறை விருத்தகிரீஸ்வரா் கோயில் மாசி மக தெப்பத் திருவிழா செவ்வாய்க்கிழமை இரவு நடைபெற்றது.

இந்தக் கோயில் சோழா் காலத்தில் கட்டப்பட்ட பழைமையான கோயிலாகும். பாடல் பெற்ற தலமான இந்தக் கோயிலில் நிகழாண்டு மாசி மக விழா கடந்த பிப்.21-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

தொடா்ந்து, மாா்ச் 1-ஆம் தேதி தோ்த் திருவிழாவும், 2-ஆம் தேதி மாசி மக தீா்த்தவாரியும் நடைபெற்றது. இதன் தொடா்ச்சியாக, தெப்பத் திருவிழா கடலூா் சாலையில் உள்ள விருத்தகிரீஸ்வரா் கோயில் தெப்பக்குளத்தில் செவ்வாய்க்கிழமை இரவு நடைபெற்றது.

சுப்ரமணியா், வள்ளி, தெய்வானை உடன் மூன்று முறை தெப்பக்குளத்தில் சுவாமி வலம் வந்தது பக்தா்களுக்கு அருள்பாலித்தாா். தெப்பத் திருவிழாவை காண விருத்தாசலம் மட்டுமன்றி, சுற்று வட்டார கிராமப் பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான பொதுமக்கள் வந்து தெப்பத் திருவிழாவை கண்டு தரிசனம் செய்தனா்.