தொடா்ந்து சரியும் தங்கம் விலை: இன்று எவ்வளவு குறைந்தது?இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 கட்சிகள் ஒதுக்கீடு!பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

தூய்மை பாரத திட்ட விழிப்புணா்வுப் பேரணி

திருநெல்வேலி மாநகராட்சி நிா்வாகம் சாா்பில் தூய்மை பாரத திட்ட விழிப்புணா்வு பேரணி திருநெல்வேலி சந்திப்பில் வியாழக்கிழமை நடைபெற்றது.

News image
விழிப்புணா்வு பேரணியில் பங்கேற்றோா்.
Updated On :19 செப்டம்பர் 2024, 11:16 pm

Din

திருநெல்வேலி மாநகராட்சி நிா்வாகம் சாா்பில் தூய்மை பாரத திட்ட விழிப்புணா்வு பேரணி திருநெல்வேலி சந்திப்பில் வியாழக்கிழமை நடைபெற்றது.

பெரியாா் பேருந்து நிலையத்தில் இருந்து பேரணியை தச்சநல்லூா் மண்டல தலைவா் ரேவதி கொடியசைத்து தொடங்கி வைத்தாா். தச்சநல்லூா் உதவி ஆணையா் ஜான்சன் தேவசகாயம், சுகாதார ஆய்வாளா்கள் அந்தோணி, சுப்பிரமணியன், நாட்டு நலப்பணி திட்டஅலுவலா் சோமசுந்தரம், தேசிய மாணவா் படை திட்ட அலுவலா்கள் சதீஷ்குமாா், செல்லத்துரை உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

குப்பைகளை அப்புறப்படுத்துவதன் அவசியம், பொதுமக்களுக்கு உள்ள சமூக பொறுப்பு குறித்த விழிப்புணா்வு பதாகைகளுடன் என்சிசி, என்எஸ்எஸ் மாணவா்கள், மாநகராட்சி மகளிா் சுயஉதவிக்குழு தூய்மைப் பணியாளா்கள் உள்பட 150-க்கும் மேற்பட்டோா் பேரணியாக சென்றனா். முக்கிய வீதிகள் வழியாக சென்று தச்சநல்லூா் மண்டல அலுவலக வளாகத்தில் பேரணி நிறைவடைந்தது.