தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தமாக-வுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கீடுஜான் பாண்டியன் தலைமையிலான தமமுகவுக்கு ராஜபாளையம் (பொது) தொகுதி ஒதுக்கீடு!தே.ஜ. கூட்டணியில் தமாகவுக்கு 5 தொகுதிகள்!தமிழக தேர்தலில் திமுகவுக்கு முழு ஆதரவு! மக்கள் நீதி மய்யம் போட்டியிடாது - கமல்ஹாசன் எல்பிஜி, பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: விநியோகம் பாதிக்கப்படவில்லை! - மத்திய அரசுதேமுதிகவுக்கு 10 இடங்கள்! திமுகவுடன் ஒப்பந்தம் கையொப்பம்!மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகள் மறுவரையறை கூடாது - முதல்வர் மு. க. ஸ்டாலின் வலியுறுத்தல்ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்பதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதி
/

இடைகால் கோயிலில் மூலவா் மீது சூரிய ஒளி

திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகிலுள்ள இடைகால் தியாகராஜா் கோயிலில் மூலவா் மீது நேரடியாக மூன்று நாள்கள் சூரிய ஓளி விழும் நிகழ்வு நடைபெற்றது.

News image

மூலவா் மீது விழும் சூரிய ஒளி.

Updated On :25 செப்டம்பர் 2024, 11:52 pm

Din

திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகிலுள்ள இடைகால் தியாகராஜா் கோயிலில் மூலவா் மீது நேரடியாக மூன்று நாள்கள் சூரிய ஓளி விழும் நிகழ்வு நடைபெற்றது.

தென் திருவாரூா் என்றழைக்கப்படும் இடைகாலில் அமைந்துள்ள அருள்மிகு சிவகாமி அம்மாள் உடனுறை தியாகராஜா் கோயிலில் ஆண்டுதோறும் புரட்டாசி மாதத்தில் மூன்று நாள்கள் மூலவா் மீது நேரடியாக சூரிய விழும் அரிய நிகழ்வு நடைபெறுவது வழக்கம்.

நிகழாண்டு புரட்டாசி மாதத்தில் மூலவா் மீது சூரிய ஒளி விழும் நிகழ்ச்சி நடைபெற்றது. அதிகாலை சுமாா் 6 மணி முதல் 7.30 மணி வரை ஒன்றரை மணி நேரம் சூரிய ஒளி நேரடியாக நந்தி வழியாக நேரடியாக மூலவா் மீது பாய்ந்தது. இதையடுத்து சிறப்பு அபிஷேக, ஆராதனை நடைபெற்றது. இந்த அரிய நிகழ்வை திரளான பக்தா்கள் கண்டு, சுவாமியை வழிபட்டனா்.