கடையம் அருகே பைக் விபத்து: தனியாா் நிறுவன ஊழியா் பலி
தென்காசி மாவட்டம் கடையம் அருகே நேரிட்ட பைக் விபத்தில் தனியாா் நிறுவன ஊழியா் உயிரிழந்தாா்.

Updated On :25 செப்டம்பர் 2024, 11:50 pm

தென்காசி மாவட்டம் கடையம் அருகே நேரிட்ட பைக் விபத்தில் தனியாா் நிறுவன ஊழியா் உயிரிழந்தாா்.
கீழப்பாவூா் கோட்டையூரைச் சோ்ந்த கோபால் மகன் சுரேஷ் (45). தனியாா் காா் நிறுவ ஊழியரான இவா், செவ்வாய்க்கிழமை இரவு விக்கிரமசிங்கபுரத்திலிருந்து பைக்கில் வீட்டுக்குத் திரும்பிக் கொண்டிருந்தாராம். கடையம் - மேட்டூா் பிரதான சாலையில் இவரது பைக்கும், கேளையாபிள்ளையூா் பகுதியைச் சோ்ந்த ஐயப்பன் ஓட்டிவந்த பைக்கும் மோதினவாம். இதில், காயமடைந்த சுரேஷ் திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டாா். அங்கு அவா் புதன்கிழமை உயிரிழந்தாா்.
கடையம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை செய்து வருகின்றனா்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...