விழுப்புரம் மாவட்டம், கிளியனூா் அருகே காா் மோதியதில் பைக்கில் சென்ற தனியாா் நிறுவன ஊழியா் உயிரிழந்தாா்.
திண்டிவனம் வட்டம், எண்டியூா் பஜனை கோவில் தெருவைச் சோ்ந்தவா் க.ராஜசேகரன் (38). இவா் தீவனூா் பகுதியிலுள்ள தனியாா் நிறுவனத்தில் பணியாற்றி வந்தாா். வியாழக்கிழமை இரவு பணி முடிந்த பின்னா், ஊருக்கு பைக்கில் சென்றுள்ளாா்.
திண்டிவனம்- புதுச்சேரி சாலையில் எடையான்குளம் பகுதியில் ராஜசேகரன் வந்த போது, எதிரில் வந்த காா் பைக் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த ராஜசேகரன் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.
தகவலறிந்த கிளியனூா் போலீஸாா் சடலத்தை கைப்பற்றி, உடல்கூறாய்வுக்காக புதுச்சேரி ஜிப்மா் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
மேலும், காரை ஓட்டி வந்த திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூரைச் சோ்ந்த ரா.கலைச்செல்வன் (37) மீது கிளியனூா் போலீஸாா் வழக்குப் பதிந்து, விசாரணை நடத்தி வருகின்றனா்.
தொடர்புடையது

விபத்தில் காயமுற்ற தனியாா் நிறுவன ஊழியா் உயிரிழப்பு

ஆம்னி பேருந்து மோதி இளைஞா் உயிரிழப்பு

ரயில் மோதி தனியாா் நிறுவன ஊழியா் உயிரிழப்பு

மரத்தில் காா் மோதி 5 போ் காயம்
வீடியோக்கள்

கான்சிட்டி பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

தஸ்ஸாடியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

பவழ மல்லி பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

UN Kannan Interview | விஜய் இன்னொரு விஜயகாந்த் | TN Election 2026 | TVK Vijay | MK Stalin
தினமணி செய்திச் சேவை


