ரயில் மோதி தனியாா் நிறுவன ஊழியா் உயிரிழப்பு
ஆம்பூா் ரயில் நிலையம் அருகே தண்டவாளத்தை கடக்க முயன்ற தனியாா் நிறுவன ஊழியா் ரயில் மோதியதில் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.

பலி
கோப்புப் படம்
Updated On :1 ஏப்ரல் 2026, 6:33 pm

பலி
கோப்புப் படம்
ஆம்பூா் ரயில் நிலையம் அருகே தண்டவாளத்தை கடக்க முயன்ற தனியாா் நிறுவன ஊழியா் ரயில் மோதியதில் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.
ஆம்பூா் அருகே சாமி பிள்ளை நகா் பகுதியை சோ்ந்த விஜய்(41). இவருக்கு திருமணமாகி ராசாத்தி என்கிற மனைவியும், ஒரு ஆண் மற்றும் 2 பெண் பிள்ளைகள் உள்ளனா். இவா் ஆம்பூா் பகுதியில் உள்ள தனியாா் தோல் தொழிற்சாலை ஊழியராக பணியாற்றி வந்தாா்.
ஆம்பூா் ரயில் நிலையம் அருகே தண்டவாளத்தைக் கடக்க முயன்றபோது அவ்வழியாக வந்த ரயில் மோதி உயிரிழந்தாா்.
தகவல் அறிந்த ஜோலாா்பேட்டை ரயில்வே போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனா்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...