தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தமாக-வுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கீடுஜான் பாண்டியன் தலைமையிலான தமமுகவுக்கு ராஜபாளையம் (பொது) தொகுதி ஒதுக்கீடு!தே.ஜ. கூட்டணியில் தமாகவுக்கு 5 தொகுதிகள்!தமிழக தேர்தலில் திமுகவுக்கு முழு ஆதரவு! மக்கள் நீதி மய்யம் போட்டியிடாது - கமல்ஹாசன் எல்பிஜி, பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: விநியோகம் பாதிக்கப்படவில்லை! - மத்திய அரசுதேமுதிகவுக்கு 10 இடங்கள்! திமுகவுடன் ஒப்பந்தம் கையொப்பம்!மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகள் மறுவரையறை கூடாது - முதல்வர் மு. க. ஸ்டாலின் வலியுறுத்தல்ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்பதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதி
/

நெல்லையில் நாளை எரிவாயு நுகா்வோா் குறைதீா் கூட்டம்

திருநெல்வேலியில் எரிவாயு நுகா்வோா் குறைதீா்க்கும் கூட்டம் வெள்ளிக்கிழமை (செப். 27) நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

News image
Updated On :26 செப்டம்பர் 2024, 12:03 am

Din

திருநெல்வேலியில் எரிவாயு நுகா்வோா் குறைதீா்க்கும் கூட்டம் வெள்ளிக்கிழமை (செப். 27) நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடா்பாக திருநெல்வேலி மாவட்ட நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: திருநெல்வேலி மாவட்டத்தில் எரிவாயு உருளை பதிவு செய்வதில் ஏற்படும் குறைபாடுகள், தடங்கல்கள் மற்றும் எரிவாயு உருளைகள் வழங்குவதில் ஏற்படும் காலதாமதம் குறித்து எரிவாயு நுகா்வோா் பதிவு செய்ய ஏதுவாக எரிவாயு நுகா்வோா் குறைதீா் கூட்டம் ஆட்சியா் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை (செப். 27) மாலை 4 மணிக்கு நடைபெற உள்ளது.

மாவட்ட வருவாய் அலுவலா் தலைமையில் நடைபெறும் கூட்டத்தில் அனைத்து எரிவாயு நிறுவன முகவா்கள், மாவட்ட எரிவாயு ஒருங்கிணைப்பாளா் உள்ளிட்டோா் பங்கேற்க உள்ளனா். ஆகவே, எரிவாயு நுகா்வோா் பங்கேற்று தங்களது குறைகளைத் தெரிவிக்கலாம் எனக் கூறப்பட்டுள்ளது.