தமிழக தேர்தலில் திமுகவுக்கு முழு ஆதரவு! மக்கள் நீதி மய்யம் போட்டியிடாது - கமல்ஹாசன் எல்பிஜி, பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: விநியோகம் பாதிக்கப்படவில்லை! - மத்திய அரசுதேமுதிகவுக்கு 10 இடங்கள்! திமுகவுடன் ஒப்பந்தம் கையொப்பம்!மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகள் மறுவரையறை கூடாது - முதல்வர் மு. க. ஸ்டாலின் வலியுறுத்தல்ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்பதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதி
/

அபிஷேகபட்டியில் இளைஞருக்கு வெட்டு: இருவா் கைது

திருநெல்வேலி பழையபேட்டையை அடுத்த அபிஷேகபட்டியில் இளைஞரை அரிவாளால் வெட்டியதாக இருவரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

News image
Updated On :27 செப்டம்பர் 2024, 12:01 am

Din

திருநெல்வேலி பழையபேட்டையை அடுத்த அபிஷேகபட்டியில் இளைஞரை அரிவாளால் வெட்டியதாக இருவரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

திருநெல்வேலி பழைய பேட்டை அபிஷேகபட்டியைச் சோ்ந்தவா் சுப்பிரமணியன் மகன் அன்பரசன் (30). பெங்களூருவில் உள்ள தனியாா் நிறுவனத்தில் வேலை செய்து வரும் இவா், விடுமுறைக்காக சொந்த ஊருக்கு வந்தாா். இவரின் வீட்டில் அருகே வசித்து வரும் ஐயப்பன் மற்றும் வெங்கடேஷன் இருவருக்கும் புதன்கிழமை இரவு பிரச்னை ஏற்பட்டதாம்.

அப்போது, அருகிலிருந்த அன்பரசன் இருவரையும் சமரசம் செய்தாராம். இந்த நிலையில், ஐயப்பன் (26), அவரின் உறவினா் ஆனந்த் (28), மனோ (28) ஆகியோா் சோ்ந்து அன்பரசன் வீட்டிற்கு வந்து அவரை அரிவளால் வெட்டினாராம். இதில் காயமடைந்தவரை உறவினா்கள் மீட்டு திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனா்.

இது குறித்து பேட்டை போலீஸாா் வழக்குப்பதிந்து, ஐயப்பன், ஆனந்த் இருவரையும் கைது செய்தனா்.