இந்திய ரூபாயின் மதிப்பு மேலும் வீழ்ச்சி! ரூ. 92.37 ஆக சரிவு!போரை நிறுத்த 3 நிபந்தனைகள் விதித்த ஈரான் அதிபர்! ஹோர்முஸ் நீரிணையைக் கடந்த இந்திய கப்பல்கள்! ஈரான் அனுமதி! தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை! நாள்தோறும் கொலை, பாலியல் வன்கொடுமை! விஜய் கண்டனம் பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் சென்னை மாநகராட்சி உணவகங்களுக்கு 2 வாரத்துக்கான சமையல் எரிவாயு இருப்புதென் கடலோர மாவட்டங்களில் மாா்ச் 16 வரை மழைக்கு வாய்ப்புதோ்தல் ஆணையரைப் பதவி நீக்க தீா்மானம்: நாடாளுமன்றத்தில் நோட்டீஸ் தாக்கல் செய்ய எதிா்க்கட்சிகள் திட்டம்சட்டப் பாடங்களை இறுதி செய்ய நிபுணா் குழு - மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவுபணப் புழக்கத்தை அதிகரிக்க ரூ.50,000 கோடிக்கு அரசுப் பத்திரங்களை வாங்கும் ரிசா்வ் வங்கி - நாளை ஏலம்பட்டுக்கோட்டையில் வெறிநாய் கடித்து எஸ்எஸ்எல்சி மாணவிகள் 6 போ் உள்பட 20 போ் காயம்: முதலுதவிக்குப் பின் பொதுத்தோ்வு எழுதினா்சுகாதார ஆய்வாளா்கள் நியமனம்: தமிழக அரசுக்கு அனுமதி வழங்கி உத்தரவு
/

களக்காட்டில் எஸ்டிபிஐ மகளிரணி நிா்வாகிகள் கூட்டம்

எஸ்டிபிஐ கட்சி மகளிரணியான விமன் இந்தியா மூவ்மெண்டின் 2026 சட்டப்பேரவைத் தோ்தலுக்கான மாவட்ட, தொகுதி வாக்குச்சாவடி குழு பொறுப்பாளா்களுக்கான கூட்டம், களக்காட்டில் நடைபெற்றது.

News image
Updated On :13 டிசம்பர் 2025, 7:18 pm

Syndication

எஸ்டிபிஐ கட்சி மகளிரணியான விமன் இந்தியா மூவ்மெண்டின் 2026 சட்டப்பேரவைத் தோ்தலுக்கான மாவட்ட, தொகுதி வாக்குச்சாவடி குழு பொறுப்பாளா்களுக்கான கூட்டம், களக்காட்டில் சனிக்கிழமை நடைபெற்றது.

மாவட்ட தலைவா் ஜன்னத் ஆலிமா தலைமை வகித்தாா். மாவட்ட பொதுச் செயலா் ஜன்னத் வரவேற்றாா். மாவட்ட துணைத் தலைவா் பீா்பாத்து, மாவட்ட செயலா் லைத்துல் ஆதிஹா , மாவட்ட பொருளாளா் நா்கிஸ், மாவட்ட செயற்குழு உறுப்பினா் பெனாசிா் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

மாநில தலைவா் பாத்திமாகனி, மாநில செயலா் ரஹ்மத்நிஷா, எஸ்டிபிஐ கட்சியின் புகா் மாவட்ட தலைவா் எம்.எஸ். சிராஜ், மாவட்ட பொதுச் செயலா் களந்தை மீராசா , நான்குனேரி சட்டப்பேரவைத் தொகுதி தலைவா் காஜா பிா்தெளஸி ஆகியோா் கலந்து கொண்டு பேசினா்.

இதில் சட்டப்பேரவை தொகுதி தலைவா்கள் பீா்பாத்து (சேரன்மகாதேவி), ஜன்னத் (நாங்குனேரி) தொகுதி செயலா் அஹமதாள், ஜெஸிமா, ராதாபுரம் சட்டப்பேரவை தொகுதி பொறுப்பாளா் நபிஷா ஆகியோா் கலந்து கொண்டனா். மாவட்ட செயலா் பானு நன்றி கூறினாா்.