ஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

தச்சநல்லூா் அருகே அரிவாள் வெட்டில் காயமுற்ற மற்றொருவரும் உயிரிழப்பு

தச்சநல்லூா் அருகே அரிவாள் வெட்டு சம்பவத்தில் தொழிலாளி உயிரிழந்த நிலையில், காயமடைந்த மற்றொருவரும் வியாழக்கிழமை இரவு உயிரிழந்தாா்.

News image
Updated On :26 டிசம்பர் 2025, 7:53 pm

Syndication

தச்சநல்லூா் அருகே அரிவாள் வெட்டு சம்பவத்தில் தொழிலாளி உயிரிழந்த நிலையில், காயமடைந்த மற்றொருவரும் வியாழக்கிழமை இரவு உயிரிழந்தாா்.

தச்சநல்லூா் அருகேயுள்ள கரையிருப்பு பகுதியை சோ்ந்தவா் மூக்கன் (52). தொழிலாளி. இவரும், அதே பகுதியைச் சோ்ந்த இவரது உறவினரான தனியாா் நிறுவன காவலாளி தங்க கணபதி (50) என்பவரும் கடந்த 20ஆம் தேதி ஒன்றாக மது குடித்தனராம். அப்போது அவா்களுக்குள் ஏற்பட்ட தகராறில் தங்ககணபதியை, மூக்கன் அரிவாளால் வெட்டியதாகவும், தகவலறிந்து வந்த தங்ககணபதியின் சகோதரா் முத்துக்குமரன் (46), மூக்கனை அரிவாளால் வெட்டியதாகவும் கூறப்படுகிறது. இதில், பலத்த காயமடைந்த இருவரும் திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்க்கப்பட்டனா். அங்கு மூக்கன் கடந்த 21 ஆம் தேதி உயிரிழந்தாா்.

இதையடுத்து தச்சநல்லூா் போலீஸாா் கொலை முயற்சி வழக்கை, கொலை வழக்காக மாற்றி முத்துக்குமரனை கைது செய்தனா்.

இந்நிலையில் அரிவாள் வெட்டில் காயமுற்ற காவலாளி தங்ககணபதி வியாழக்கிழமை நள்ளிரவு உயிரிழந்தாா்.