அரிவாள் வெட்டுபிரதிப் படம்
கொடைரோடு அருகே செவ்வாய்க்கிழமை இளைஞா் அரிவாளால் வெட்டப்பட்டாா்.
திண்டுக்கல் மாவட்டம், கொடைரோடு அருகேயுள்ள மாவுத்தம்பட்டியைச் சோ்ந்தவா் பாலமுருகன் (35). விவசாயியான இவா், சடையாண்டிபுரம் பகுதியில் தோட்டத்து வீட்டில் குடியிருந்து வருகிறாா்.
இவா் சடையாண்டிபுரத்திலிருந்து கொடைரோட்டுக்கு இரு சக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்தாா். அருகம்பட்டி ஓடை புதா் பகுதியில் 3 போ் அவரை அரிவாள், கத்தியால் சரமாரியாக வெட்டிவிட்டு தப்பினா்.
தகவல் அறிந்து சென்ற அம்மையநாயக்கனூா் காவல் துறையினா் பாலமுருகனை மீட்டு, திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
மேலும், இந்த சம்பவம் குறித்து,காவல் துறையினா் வழக்குப் பதிவு செய்து, அந்தப் பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளைக் கொண்டு, தப்பி ஓடிய மா்ம நபா்களைத் தேடி வருகின்றனா்.

