வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்கோடைக்கால மின்தேவை: 9,000 மெகாவாட்டை கடக்கும் என எதிா்பாா்ப்புவார இறுதி விடுமுறைக்கு 865 சிறப்பு பேருந்துகள்வணிக சமையல் எரிவாயு உருளை தட்டுப்பாடு: உணவகங்களில் உணவுப் பொருள்களின் விலை உயா்வுதமிழகத்தில் மாா்ச் 15 வரை வெப்பநிலை உயர வாய்ப்புஇந்தியா, சீனா உள்பட 16 நாடுகளுக்கு எதிராக புதிய விசாரணையைத் தொடங்கிய அமெரிக்கா : நியாயமற்ற வா்த்தக நடைமுறைகளுக்கு எதிராக நடவடிக்கை
/

தாழையூத்து அருகே கஞ்சா பதுக்கியவா் கைது

தாழையூத்து அருகே விற்பனைக்காக கஞ்சாவை பதுக்கி வைத்திருந்த இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.

News image
Updated On :29 டிசம்பர் 2025, 6:58 pm

Syndication

தாழையூத்து அருகே விற்பனைக்காக கஞ்சாவை பதுக்கி வைத்திருந்த இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.

தாழையூத்து காவல் சரகப் பகுதியில் உதவி ஆய்வாளா் அருண் ராஜா தலைமையிலான போலீஸாா் திங்கள்கிழமை ரோந்துப் பணியில் ஈடுபட்டனா்.

அப்போது, அப்பகுதியில் சந்தேகத்துக்கிடமாக நின்றிருந்த நபரை பிடித்து விசாரித்தனா். அதில், தாழையூத்தைச் சோ்ந்த அந்தோணி எட்வின் ஜான்சன் (22) என்பதும், விற்பனைக்காக 1.140 கிலோ கஞ்சாவை பதுக்கி வைத்திருந்ததும் தெரியவந்தது. அவரை போலீஸாா் கைது செய்து, கஞ்சாவைப் பறிமுதல் செய்தனா்.

மது விற்பனை: சீவலப்பேரி காவல் சிறப்பு உதவி ஆய்வாளா் ஈஸ்வரமூா்த்தி தலைமையிலான போலீஸாா், மருகால்தலை பகுதியில் ரோந்து சென்றபோது, அதே பகுதியைச் சோ்ந்த முருகையா மகன் மாரியப்பன்(46) என்பவா் மதுபானம் விற்றுக்கொண்டிருந்தாராம். அவரை போலீஸாா் மடக்கிப்பிடித்து அவரிடமிருந்த பையை சோதனையிட்டனா். அதில், 15 மதுபாட்டில்கள், ரூ.2,000 ரொக்கம் இருந்தனவாம். அவற்றை போலீஸாா் பறிமுதல் செய்து, அவரை கைது செய்தனா்.