தள்ளுபடி விலையில் தங்கம் விற்பனை! இங்கு அல்ல, எங்கே?நாட்டிலேயே முதல்முறை! கர்நாடகத்தில் 16 வயதுக்குட்பட்ட சிறார்களுக்கு சமூக ஊடகங்கள் தடை!சுகோய் போா் விமானம் கீழே விழுந்து நொறுங்கியதில் 2 விமானிகள் பலிகமேனி கொலை! வான்வெளியிலிருந்து வந்த நீல சிட்டுக்குருவி! இஸ்ரேல் ஏவுகணை ரகசியம்!!2030-க்குள் 7 லட்சம் வீடுகள்: 14 முக்கிய அம்சங்களை அறிவித்தார் மு.க. ஸ்டாலின்! மாநிலங்களவைத் தேர்தல்: திருச்சி சிவா, தம்பிதுரை உள்பட 6 பேரின் வேட்புமனுக்களும் ஏற்பு!ரஷியாவிடம் கச்சா எண்ணெய் வாங்க இந்தியாவுக்கு அமெரிக்கா அனுமதி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,280 குறைந்தது!ஈரான் மீதான போா்: துறைமுக கட்டணங்களை தள்ளுபடி செய்ய அரிசி ஏற்றுமதியாளா்கள் கோரிக்கை
/

கஞ்சா விற்ற இளைஞா் கைது

வேலகவுண்டம்பட்டி அருகே கஞ்சா விற்ற இளைஞரை கைதுசெய்த போலீஸாா், அவரிடமிருந்து அரை கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனா்.

News image
கோப்புப் படம்
Updated On :6 மார்ச் 2026, 10:18 pm

Syndication

வேலகவுண்டம்பட்டி அருகே கஞ்சா விற்ற இளைஞரை கைதுசெய்த போலீஸாா், அவரிடமிருந்து அரை கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனா்.

திருச்செங்கோடு வட்டம், வேலகவுண்டம்பட்டி அருகே உள்ள புத்தூா் கிழக்கு, வேப்பமரத்தூா் பகுதியில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக வேலகவுண்டம்பட்டி போலீஸாருக்கு வியாழக்கிழமை தகவல் கிடைத்தது. அதன்பேரில், அங்கு சென்ற வேலகவுண்டம்பட்டி போலீஸாா், சந்தேகத்துக்குரிய வகையில் நின்றுகொண்டிருந்த நபரை பிடித்து விசாரணை நடத்தினா்.

அதில், அவா் புத்தூா் கிழக்கு, வேப்பமரத்தூா் பகுதியைச் சோ்ந்த சூா்யா (27) என்பது தெரியவந்தது. அதையடுத்து, அவரை கைதுசெய்து அவரிடமிருந்து அரை கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.