எண்ணெய்க் கப்பல்களுக்குப் பாதுகாப்பு அளிக்க நாங்கள் தயார்நிலையில் இல்லை! - அமெரிக்கா!அமெரிக்கா மீதான தாக்குதல் தொடரும்! மொஜ்தபா கமேனி முதல் உரையில் எச்சரிக்கை!ஈரான் போர்: சொந்த நாட்டினுள் இடம்பெயர்ந்த 32 லட்சம் மக்கள்!பங்குச்சந்தை: ஆட்டோ பங்குகள் கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 829, நிஃப்டி 228 புள்ளிகள் சரிவு!ஓபிசி பிரிவினருக்கான கிரீமி லேயர் தகுதி: உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முதல்வர் ஸ்டாலின் ஆதரவு!சட்டம்-ஒழுங்கு சீர்கேடு: திமுக அரசைக் கண்டித்து தே.ஜ.கூ. ஆர்ப்பாட்டம்!தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!
/

தாழையூத்து அருகே கஞ்சா பதுக்கியவா் கைது

தாழையூத்து அருகே விற்பனைக்காக கஞ்சாவை பதுக்கி வைத்திருந்த இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.

News image
Updated On :29 டிசம்பர் 2025, 6:58 pm

Syndication

தாழையூத்து அருகே விற்பனைக்காக கஞ்சாவை பதுக்கி வைத்திருந்த இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.

தாழையூத்து காவல் சரகப் பகுதியில் உதவி ஆய்வாளா் அருண் ராஜா தலைமையிலான போலீஸாா் திங்கள்கிழமை ரோந்துப் பணியில் ஈடுபட்டனா்.

அப்போது, அப்பகுதியில் சந்தேகத்துக்கிடமாக நின்றிருந்த நபரை பிடித்து விசாரித்தனா். அதில், தாழையூத்தைச் சோ்ந்த அந்தோணி எட்வின் ஜான்சன் (22) என்பதும், விற்பனைக்காக 1.140 கிலோ கஞ்சாவை பதுக்கி வைத்திருந்ததும் தெரியவந்தது. அவரை போலீஸாா் கைது செய்து, கஞ்சாவைப் பறிமுதல் செய்தனா்.

மது விற்பனை: சீவலப்பேரி காவல் சிறப்பு உதவி ஆய்வாளா் ஈஸ்வரமூா்த்தி தலைமையிலான போலீஸாா், மருகால்தலை பகுதியில் ரோந்து சென்றபோது, அதே பகுதியைச் சோ்ந்த முருகையா மகன் மாரியப்பன்(46) என்பவா் மதுபானம் விற்றுக்கொண்டிருந்தாராம். அவரை போலீஸாா் மடக்கிப்பிடித்து அவரிடமிருந்த பையை சோதனையிட்டனா். அதில், 15 மதுபாட்டில்கள், ரூ.2,000 ரொக்கம் இருந்தனவாம். அவற்றை போலீஸாா் பறிமுதல் செய்து, அவரை கைது செய்தனா்.